வியாழன், பிப்ரவரி 09, 2006

ஊடும் பொழுதுகள்


மயக்கும் விழிகளில்
மன்மதன் ஆயுதம்
ஏந்திழை மேனியில்
மோகனத் தாண்டவம்

வீழும் கார்குழல்
நாணலின் ஊர்வலம்
நினைக்கும் பொழுதினில்
நனையும் ஓர்வனம்

ஊடும் பொழுதுகள்
தோற்கும் நொடிகளில்
சீறும் வேங்கையாய்
கூடல் பிறந்திடும்

வேண்டாம் என்றுதான்
வாய்மொழி சொல்லினும்
வேண்டும் என்றெனை
விரல்கள் வீழ்த்திடும்

கெஞ்சும் இதழ்களில்
எந்தமிழ் கொஞ்சிடும்
விஞ்சும் கனங்களில்
சிந்தை அறுந்திடும்

கூடலின் பிறப்பு
ஊடலின் இறப்பு
ஆதலால் கூடுவீர்
அதன்முன் ஊடுவீர்!

9 கருத்துகள்:

Unknown சொன்னது…

:)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

நன்றி தேவ் !

பாலு மணிமாறன் சொன்னது…

கூடலுக்குப் பின் வரும் ஊடல் - சோகம். ஊடலுக்குப்பின் வரும் கூடலோ சுகம். அதை கவிதையில் காண்பது இன்னும் சுகம்.

உங்கள் கவிதை வாசிக்க - சுகம்!

பெயரில்லா சொன்னது…

:-) :-)
no comments

:-)
நேசமுடன்..
-நித்தியா

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

உங்கள் பின்னூட்டங்கள் அதனினும் சுகம் பாலு !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

நன்றி நித்யா உரைக்காமல் உணர்த்தியதற்காக !

Divya சொன்னது…

ஆஹா.......கூடலுக்காக ஊடலா?
ஊடலினால் கூடலா??

கவிதை வரிகள் அருமை,
செய்யுள் நடையில் உங்க கவிதை படித்ததே இல்லை......ஆனா அதுவும் உங்கள் எழுத்தில் ரொம்ப நல்லாயிருக்கு!

Divya சொன்னது…

\ஏந்திழை மேனியில்
மோகனத் தாண்டவம்\

ஏந்திழை- அப்படின்னா என்ன??

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...

ஆஹா.......கூடலுக்காக ஊடலா?
ஊடலினால் கூடலா??

கவிதை வரிகள் அருமை,
செய்யுள் நடையில் உங்க கவிதை படித்ததே இல்லை......ஆனா அதுவும் உங்கள் எழுத்தில் ரொம்ப நல்லாயிருக்கு! //

வாங்க திவ்யா.. :)))
அட அப்படியா என்ன..?
இது நான் எப்போதோ எழுதிய கவிதை...
இப்போதுதான் என் நடை மாற்றிவிட்டேன்.. :))
மிக்க மகிழ்ச்சி.. !!!