சனி, மார்ச் 11, 2006

மச்சக்குறி



அம்மாகூட
நடந்து வந்தா
கண்ணாலயே
திங்குற
தன்னந்தன்னியா
தனிச்சு வந்தா
தோப்போரமா
பதுங்கற

மச்சுல மேல
நின்னுகிட்டு
மொறைச்சு மொறைச்சு
பாக்குற
நான் பார்த்தா
மட்டும்
குழந்தைய போல
சிரிச்சு சிரிச்சு
மயக்குறே

யாரும் இல்லா
சமயதுல
பதுங்கி பதுங்கி
ஒதுங்குறே
அக்கம்பக்கம்
அரவம் கேட்டா
அய்யய்யோன்னு
ஓடுறே

பக்கம் வந்து
நானும் நின்னா
கொஞ்சி கொஞ்சி
பேசுறே
நானும் சேர்ந்து
சிரிச்சுப்புட்டா
கொஞ்சம் மிஞ்சப்
பாக்குற


மச்சக் குறி
சொல்லறேன்னு
மிச்சம் காட்ட
துண்டுறே
எச்சம் சொச்சம்
வைக்கலாம்னா
கழுத்தைக் கட்டித்
கெஞ்சுறே !

பழமா காயா
சொல்லறேன்னு
தொட்டுத் தொட்டு
மயக்குறே
பக்கம் வந்து
கிட்டநின்னு
பூனையாட்டம்
சிணுங்கறே

ஏடாகூடம்
ஆகிடும்னு
சொன்னா
மூக்கை விடச்சு
மொறைக்கறே
கண்ணால் என்னை
கன்னம் வச்சு
தப்புப்பண்ண
தூண்டுற

சும்மா சும்மா
பசப்பாம என்
கழுத்தில் தாலி
கட்டுடா
அப்புறம் பாரு
சேதி தெரியும்
நீ கெஞ்ச கெஞ்ச
கொஞ்சுவேன்

4 கருத்துகள்:

சிங். செயகுமார். சொன்னது…

காதல் சுகம்
கன்னி பார்வையில்
கள்ள பார்வை

கள்ள பார்வை
மெல்ல நகர்ந்து
சொல்வார்த்தை சுகமாகி
சொந்தம் சேர்வதெப்போ?

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

வருக குமார்,

அவள் நினைத்தாலே போதும்
இவன் மனம் தன்னாலே ஆடும்
கன்னி பார்த்தாலே போதும்
உயிர் சொல்லாமலே போகும்!
யாதுமாகி விட்டவளே
இவ்வுடலின் சொந்தக்காரி

பெயரில்லா சொன்னது…

அடடடா..
இப்படிக் கவிதை
எழுதி எங்களையும்
எழுத தூண்டுற :-)

நீங்கள் கவிஞர்
நாங்கள் எந்த மட்டுக்கு?

நல்லா இருக்கு நவீன்

நேசமுடன்..
-நித்தியா

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

வாங்க நித்தியா !

இப்படி சொல்லிச்
சொல்லியே
சொக்க வைக்கிறே!:-))

வருகைக்கும் தருகைக்கும் நன்றி !