சனி, மே 27, 2006

காதல்சந்தம்



நான் உன்னிடம்
பேசப்போவதில்லை
என என்னிடம்
பேச ஆரம்பிக்கிறாய்


















ஏன் என்னை
காதலித்தாய் என
மீண்டும் மீண்டும் கேட்கிறாய்
ஏன் என்னை
பெற்றாய் என
தாயிடம் கேட்பதைப்போல



















நீ வராமல் காலம் தாழ்த்தியபோது
உருவான கோபப்புயல்
தூரத்தில் நீ வருவதைப்
பார்த்த நொடியே
வழுவிழந்து கரையைக்
கடந்தது.














அவளையே பார்த்துக்கோ
என்னை விட்டு விடு
என என்னிடம்
இன்றைய ஊடலை
ஆரம்பிக்கிறாய்






















உன் பிறந்த நாளுக்காக
நான் வாங்கித்தந்த
உடையை
ஏன் என்னிடம்
அணிந்து காட்டவில்லை
எனக்கேட்டால்
என்னைக்
கிள்ள ஆரம்பிக்கிறாய்
ததும்பி வழிகின்ற
உன் அழகான நாணத்துடன்














உன்னிடம் பேசும்
நேரத்தை விட
உன்னிடம் ஊடும்
நேரத்தில்தான்
உன்னை
அதிகம் நினைக்கிறேன்
என சொன்னதற்காக
என்னிடம்
சண்டையைத் தொடங்குகிறாய்







நான் பரிசளித்த
டாலர் கோர்த்த
செயினை
ஏன் அணியவில்லை
என நான் கோபமாக
கேட்டதற்கு
அணிந்திருக்கிறேன் என
நீ எடுத்துக்காட்டியபோது
பொறாமையாக
இருந்தது
டாலருக்கு மட்டும்
ஏன் இந்த கொடுப்பினை என்று

புதன், மே 24, 2006

ஆதலினால் காதல் செய்வீர் !




பேசாமல்
இருக்க மாட்டியா?
என்கிறாய்
விரல்களுக்கு
ஏது காதுகள் ?



கொஞ்ச நேரம்
சும்மா இருக்க
சொல்கிறாய்
கொஞ்சும் நேரம்
கொஞ்சநேரமாய்
எப்படி
இருக்கும் ?




யாராவது
வந்துவிடப்போகிறார்கள்
என்றபடியே
நெருங்குகின்றன
நம்
இதழ்கள்!



ஒவ்வொரு முறையும்
சீக்கிரம் போகவேண்டும்
என்கிறாய்
நமது சீக்கிரம்
அவ்வளவு சீக்கிரமாய்
வருவதில்லை !




ஏன் என்னை இப்படி
படுத்தரே ? கோபத்துடன்
கேட்கிறாய்
இருந்தும் எனக்காக
ஈரமாகின்றன
உன் உதடுகள் !




சுரிதாரிலே
நல்லா இருக்கேனா ?
இல்லை சேலையிலே
நல்லா இருக்கேனா ?

ரெண்டுலயுமே நல்லாதான்
இருப்படா நீ
ஆனா ரெண்டுமே
இல்லாமலும்
நல்லா இருப்ப !

சொன்ன பதிலுக்காக
நீ கிள்ளிய இடத்தில்
காதல் கட்டிக்கொண்டதடி !



போதும் என
எப்போதாவது
சொல்லி இருக்கிறாயா?
சிணுங்களுடன்
குனிகிறாய்
என் முகம் நோக்கி !!




நான் விட்டு விட்டு
சென்று விட்டால் என்ன
செய்வாய்?
ம்ம் கொலை செய்து
விடுவேன்
உன் காதலை !!
நீதான் என் காதல்
அப்படியென்றால்..?