ஞாயிறு, ஜூன் 03, 2007

செல்லமாய் காதலித்து...

chellam1



நான் கவிதை
எழுதும்போதெல்லாம்
நமக்குள் சண்டை ஆரம்பித்து
விடுகிறாய்
இது எவளை நினைத்து எழுதிய
கவிதை என



chellam2


நமக்குள் ஆரம்பிக்கும்
ஒவ்வொரு சண்டையும்
வாயிலே ஆரம்பித்து
நம் இதழ்களிலே
முடிக்கப்படுகிறது





chellam3


இனி உன்னுடன் பேச
போவதில்லை என
சொல்லிவிட்டு பேசாமல்
இருக்கிறாய்
சரி நீ
உபயோகப்படுத்தாத உன்
உதடுகளை நான்
ஒரு முத்ததிற்கு
உபயோகப்படுத்திக்கொள்ளலாமா?





chellam4


சில நேரங்களில்
சில பொய்கள்
காதலுக்கு
நன்மை பயக்கும்
‘நீ கோபப்படும்போது
இன்னும் அழகாய் இருக்கிறாய்’
என்பதைப் போல





chellam5


இதுக்கு முன்னாடி இப்படி
எத்தனை பொய் சொன்னாய்
என்னிடம் என நீ கோபமாக
கேட்கிறாய்
‘ நான் உன்னிடம் பொய்யே
சொன்னதில்லைடி இதுதான்
முதன் முறை ! ‘
நான் சொல்வது பொய் என
தெரிந்தும் ரசிக்கிறாய்





chellam6


உன்னைத்தவிர வேற
எந்தப்பெண்ணையும்
பார்க்கக்கூடாதென
சண்டையிடுகிறாய்
சரி இனி பார்க்கமாட்டேன்
என உன்னைப்பார்த்தாலும்
‘அப்படிப் பார்க்காதே!’
என ஏற்படும் வெட்கத்தை
மறைக்க கோபமாக உன்
முகத்தைக் காட்ட நீ படும்பாடு
இருக்கிறதே !!





chellam7


ஏதேனும் உன்னிடம்
சண்டையிடாமல்
இப்பொழுதெல்லாம்
என்னால் இருக்க முடிவதில்லை
ஊடிக் கூடின்
கோடி ஆனந்தம் !





chellam8



அவகூட பேசரப்போ என்ன
ஈஈன்னு இளிப்பு உனக்கு? என
சண்டை போடுகிறாய்
சரியென சிரிக்காமல் பேசினாலோ
அப்படி என்ன சீரியசா
பேசினே அவகூட
என சந்தேகத்தோடு கேட்கிறாய்





chellam9



கொஞ்ச நேரம் படம்பார்க்க
விடேன் என கோபமாகக்
கூறுகிறாய்
இப்படிக் கூறியே
என்னைக் கெஞ்ச வைத்து
உன்னைக் கொஞ்ச வைப்பதில்
என்னதான்
ஆனந்தமோ !





chellam10



செல்லச் சண்டையும்
கள்ளப் பார்வையும்
குட்டிப் பொய்களும்
சிணுங்கள் முத்தங்களும்
காதல் கொண்டு
ஊடல் கொண்டவருக்கான
கொண்டாட்டங்கள்
எனப்படும்

38 கருத்துகள்:

நந்தா சொன்னது…

என்னங்க ரொம்ப நாளாச்சு.

//‘அப்படிப் பார்க்காதே!’
என ஏற்படும் வெட்கத்தை
மறைக்க கோபமாக உன்
முகத்தைக் காட்ட நீ படும்பாடு
இருக்கிறதே !!//

கலக்கல் வரிகள்....காதல் கொப்புளிக்குது.


//என்னைக் கெஞ்ச வைத்து
உன்னைக் கொஞ்ச வைப்பதில்
என்னதான்
ஆனந்தமோ !//

அனுபவிச்சாதான் தெரியும் இந்த சுகமெல்லாம்....

வழக்கம் போலவே கலக்கி இருக்கறீங்க.

நாமக்கல் சிபி சொன்னது…

அட்ரா சக்கை! அட்ரா சக்கை! அட்ரா சக்கை!

கதிரவன் சொன்னது…

இனி உன்னுடன் பேச
போவதில்லை என
சொல்லிவிட்டு பேசாமல்
இருக்கிறாய்
சரி நீ
உபயோகப்படுத்தாத உன்
உதடுகளை நான்
ஒரு முத்ததிற்கு
உபயோகப்படுத்திக்கொள்ளலாமா?

இந்தக் கவிதையிலிருக்கும் குறும்பு ரசிக்க வைத்தது :-)

இத்தனை நாள் விடுப்புக்கு, ஏதாவது விசேஷமான காரணமுண்டோ ;-) ?

பெயரில்லா சொன்னது…

இதர கவிஞர்கள் பயன்படுத்தும் அதிமேதாவித்தனமான வார்த்தைகள் இல்லாது, மிகஎளிய வார்த்தைகளுடன் கூடிய, உங்கள் கவிதைகள் அதற்கேற்ற படங்கள் மிக அருமை.

பெயரில்லா சொன்னது…

யப்பா
கண்ண கட்டுது
உட்டுடுங்க சாமிகளா இந்த காதலையும் பொண்ணையும்

பெயரில்லா சொன்னது…

very nice poems!!!!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Nandha said...
என்னங்க ரொம்ப நாளாச்சு.

//‘அப்படிப் பார்க்காதே!’
என ஏற்படும் வெட்கத்தை
மறைக்க கோபமாக உன்
முகத்தைக் காட்ட நீ படும்பாடு
இருக்கிறதே !!//

கலக்கல் வரிகள்....காதல் கொப்புளிக்குது.//

வாங்க நந்தா :)))
மிக்க நன்றி உற்சாகம் கொப்பளிக்கும் வரிகளால் பாராட்டியதற்கு ! :))


//என்னைக் கெஞ்ச வைத்து
உன்னைக் கொஞ்ச வைப்பதில்
என்னதான்
ஆனந்தமோ !//

அனுபவிச்சாதான் தெரியும் இந்த சுகமெல்லாம்....

வழக்கம் போலவே கலக்கி இருக்கறீங்க. //

மிக்க நன்றி நந்தா !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// நாமக்கல் சிபி said...
அட்ரா சக்கை! அட்ரா சக்கை! அட்ரா சக்கை! //

வாங்க சிபி :)) அட அட அட என்ன ஒரு அழகான விமர்சனம் :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கதிரவன் said...
இனி உன்னுடன் பேச
போவதில்லை என
சொல்லிவிட்டு பேசாமல்
இருக்கிறாய்
சரி நீ
உபயோகப்படுத்தாத உன்
உதடுகளை நான்
ஒரு முத்ததிற்கு
உபயோகப்படுத்திக்கொள்ளலாமா?

இந்தக் கவிதையிலிருக்கும் குறும்பு ரசிக்க வைத்தது :-)//

வாங்க கதிரவன் :)))
மிக்க நன்றி :)))

//இத்தனை நாள் விடுப்புக்கு, ஏதாவது விசேஷமான காரணமுண்டோ ;-) ? //

ஆஹா ஆரம்பிச்சுடாதீங்க கதிர் ! விசேசம் ஒன்றும் இல்லை நம்புங்க ! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//வெயிலான் said...
இதர கவிஞர்கள் பயன்படுத்தும் அதிமேதாவித்தனமான வார்த்தைகள் இல்லாது, மிகஎளிய வார்த்தைகளுடன் கூடிய, உங்கள் கவிதைகள் அதற்கேற்ற படங்கள் மிக அருமை. //

வாருங்கள் வெயிலான் :)))
பெயரே அழகாக வைத்துஇருக்கிறீர்கள் !! ரசிப்புக்கு மிக்க நன்றி வெயிலான் :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//காதல் கவுஜ புடிக்காதவன் said...
யப்பா
கண்ண கட்டுது
உட்டுடுங்க சாமிகளா இந்த காதலையும் பொண்ணையும் //

வாங்க கவுஜ புடிக்காதவரே !!:))))
ஏன் இவ்வளவு வெறுப்பு ?? கவலைபடாதீங்க சரியா ??:))))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//subha said...
very nice poems!!!!! //

வாங்க சுபா :)))
Thank u very much !! :))

பெயரில்லா சொன்னது…

ஹையோ எப்படி இப்படியெல்லாம்??

சிந்து

பெயரில்லா சொன்னது…

wow, Superb !! keep it up !

நளாயினி சொன்னது…

adaa daa ..! mmm. nice.

ராஜா சொன்னது…

hey ! Nice one !!!!!

சத்தியா சொன்னது…

"ஏதேனும் உன்னிடம்
சண்டையிடாமல்
இப்பொழுதெல்லாம்
என்னால் இருக்க முடிவதில்லை
ஊடிக் கூடின்
கோடி ஆனந்தம் !"...

ம்ம்... எல்லாமே நன்றாகவே இருக்கின்றன. ரசித்துச் செல்கின்றேன்.

வாழ்த்துக்கள் நவீன்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
ஹையோ எப்படி இப்படியெல்லாம்??

சிந்து //

வாங்க சிந்து ! :)))
அவை அப்படித்தான் :))))))))) மிக்க நன்றி !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
wow, Superb !! keep it up ! //

வாங்க அனானி மிக்க நன்றி ! :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// நளாயினி said...
adaa daa ..! mmm. nice. //

வாருங்கள் நளாயினி :))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ராஜா said...
hey ! Nice one !!!!! //

வாருங்கள் ராஜா நன்றி ! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// சத்தியா said...
"ஏதேனும் உன்னிடம்
சண்டையிடாமல்
இப்பொழுதெல்லாம்
என்னால் இருக்க முடிவதில்லை
ஊடிக் கூடின்
கோடி ஆனந்தம் !"...

ம்ம்... எல்லாமே நன்றாகவே இருக்கின்றன. ரசித்துச் செல்கின்றேன்.

வாழ்த்துக்கள் நவீன்! //

வாங்க சத்தியா :)))
மிக்க மகிழ்ச்சி சத்தியா !மீண்டும் மீண்டும் வாருங்கள் ! :))

சேதுக்கரசி சொன்னது…

அன்புடன் கவிதைப் போட்டியில் நடுவர் ஆசிப் மீரானின் பாராட்டைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

பெயரில்லா சொன்னது…

:)

பெயரில்லா சொன்னது…

நவீன்.. உங்களுக்காக... http://xavi.wordpress.com/2007/06/20/me/

PPattian சொன்னது…

//அவகூட பேசரப்போ என்ன
ஈஈன்னு இளிப்பு உனக்கு? என
சண்டை போடுகிறாய்
சரியென சிரிக்காமல் பேசினாலோ
அப்படி என்ன சீரியசா
பேசினே அவகூட
என சந்தேகத்தோடு கேட்கிறாய்//

சூப்பர்'ங்க

It's me....NAAN.....Nanae thaan சொன்னது…

all ur kavithais are simple and sweet.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேதுக்கரசி said...
அன்புடன் கவிதைப் போட்டியில் நடுவர் ஆசிப் மீரானின் பாராட்டைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி சேதுக்கரசி :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//thurgah said...
:)//

:)) நன்றி துர்கா :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேவியர் said...
நவீன்.. உங்களுக்காக... http://xavi.wordpress.com/2007/06/20/me///

:)) நன்றி சேவியர் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//PPattian said...
//அவகூட பேசரப்போ என்ன
ஈஈன்னு இளிப்பு உனக்கு? என
சண்டை போடுகிறாய்
சரியென சிரிக்காமல் பேசினாலோ
அப்படி என்ன சீரியசா
பேசினே அவகூட
என சந்தேகத்தோடு கேட்கிறாய்//

சூப்பர்'ங்க//

வாங்க பட்டையன் :))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைகும் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//It's me....NAAN.....Nanae thaan said...
all ur kavithais are simple and sweet.//

வாங்க ' நான்' :))
மிக்க நன்றி வருகைக்கும் ரசிப்புக்கும் :)))

பெயரில்லா சொன்னது…

\\நான் கவிதை
எழுதும்போதெல்லாம்
நமக்குள் சண்டை ஆரம்பித்து
விடுகிறாய்
இது எவளை நினைத்து எழுதிய
கவிதை என\\

இந்த கவிதை 'யாரை' நினைத்து எழுதிய கவிதை????

Divya சொன்னது…

\\செல்லச் சண்டையும்
கள்ளப் பார்வையும்
குட்டிப் பொய்களும்
சிணுங்கள் முத்தங்களும்
காதல் கொண்டு
ஊடல் கொண்டவருக்கான
கொண்டாட்டங்கள்
எனப்படும்\\

சூப்பர்ப் வரிகள்,மிகவும் ரசித்தேன்!

அழகான 'கற்பனையில்' அருமையாக செதுக்கப்பட்ட கவிதை....பாராட்டுக்கள் நவீன்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
\\நான் கவிதை
எழுதும்போதெல்லாம்
நமக்குள் சண்டை ஆரம்பித்து
விடுகிறாய்
இது எவளை நினைத்து எழுதிய
கவிதை என\\

இந்த கவிதை 'யாரை' நினைத்து எழுதிய கவிதை???? //

வாருங்கள் அனானி :)))

இந்தக்கவிதை ஒரு கற்பனையான பேசும் கவிதையை நினைத்து எழுதியதுங்க... போதுமா..? :))))

பெயரில்லா சொன்னது…

\\ நவீன் ப்ரகாஷ் said...
//Anonymous said...
\\நான் கவிதை
எழுதும்போதெல்லாம்
நமக்குள் சண்டை ஆரம்பித்து
விடுகிறாய்
இது எவளை நினைத்து எழுதிய
கவிதை என\\

இந்த கவிதை 'யாரை' நினைத்து எழுதிய கவிதை???? //

வாருங்கள் அனானி :)))

இந்தக்கவிதை ஒரு கற்பனையான பேசும் கவிதையை நினைத்து எழுதியதுங்க... போதுமா..? :))))\\

ஏனுங்க 'கவிதை' பேசுமா???

உங்க கற்பனையில மட்டும் பேசுங்களா??

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\செல்லச் சண்டையும்
கள்ளப் பார்வையும்
குட்டிப் பொய்களும்
சிணுங்கள் முத்தங்களும்
காதல் கொண்டு
ஊடல் கொண்டவருக்கான
கொண்டாட்டங்கள்
எனப்படும்\\

சூப்பர்ப் வரிகள்,மிகவும் ரசித்தேன்!

அழகான 'கற்பனையில்' அருமையாக செதுக்கப்பட்ட கவிதை....பாராட்டுக்கள் நவீன்!//

வாங்க திவ்யா :)))
சூப்பர்ப் ரசனை :)))) அழகாக செதுக்கப்பட்ட பாராட்டுகள்.... மிக்க மகிழ்ச்சி.... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
\\ நவீன் ப்ரகாஷ் said...
//Anonymous said...
\\நான் கவிதை
எழுதும்போதெல்லாம்
நமக்குள் சண்டை ஆரம்பித்து
விடுகிறாய்
இது எவளை நினைத்து எழுதிய
கவிதை என\\

இந்த கவிதை 'யாரை' நினைத்து எழுதிய கவிதை???? //

வாருங்கள் அனானி :)))

இந்தக்கவிதை ஒரு கற்பனையான பேசும் கவிதையை நினைத்து எழுதியதுங்க... போதுமா..? :))))\\

ஏனுங்க 'கவிதை' பேசுமா???

உங்க கற்பனையில மட்டும் பேசுங்களா??//

வாங்க அனானி :))
விட மாட்டீங்களா..?? :))))என்ன இப்படி கேட்டுடீங்க..? கவிதை பேசறதை பார்த்தில்லையா..? உங்க காதலியை பேசச்சொல்லி பாருங்கள்..அப்போ புரியும் :)))))