புதன், மார்ச் 12, 2008

உனக்கான நானும்... எனக்கான நீயும்...





சின்னவயது உடைகளோ
சின்னதான உடைகளோ
தூக்கிப்போடாதேடி
உனக்கு வேண்டுமானால்
அவை சின்னதான உடையாக
இருக்கலாம்
ஆனால் எனக்கு அவை
காதல் சின்னமான
உடைகள்
தெரியுமா..?





ச்சீய் இப்படியெல்லாமா
ரசிப்பாய் என என்ன
நீ சாதாரணமாகக்
கேட்கிறாய்..?
நீ ச்ச்சீய் சொல்லும்
அழகுக்கு முன்
எவளுமே நிற்க முடியாது
தெரியுமா..?





ஹய்யோ போடா எனக்கு
வெட்கமா இருக்கு
என நீ சொல்ல சொல்ல
உன்னிடம் ஊற்றெடுக்கும்
வெட்கங்களை பருகவே
விளைகிறேன்
தெரியுமா..?






ஏற்கனவே அழகாக
இருக்கும்
உன்னை
மேலும் அழகாகக்கத்தான்
உன்னை
வெட்கப்படுத்துகிறேன்
தெரியுமா..?





இனிமேல் கண்ட இடத்தில்
எல்லாம் தொடாதே என
சொல்கிறாய் அப்போ
யாரும் காணாத இடத்தில்
என்றால் சரியாடி..?





உன்னிடம்
வழிந்துகொண்டிருக்கும்
வெட்கங்களையெல்லாம்
பருக பருக எனக்கு
மேலும் தாகமெடுக்கிறது
தெரியுமாடி ?





ஒரேயொரு முத்தம் கொடுக்க
எப்படியெல்லாம் கெஞ்ச
விடுவாய் ?
உன்னைப் போல நான்
கஞ்சன் இல்லை என
நிரூபிக்க போகிறேன் பார்..
தயாராக இருடி..






கொடுக்க கொடுக்க
வளரும் செல்வம் கல்வி
மட்டும் அல்ல
என் செல்லமே..
உன் முத்தமும் தான்...





ஹய்யோ வேணாம்டா
ப்ளீஸ் என நீ சொன்னாலே
வேணும்டா ப்ளீஸ் என
நான் அர்த்தம் பண்ணிக்
கொள்கிறேனாம்...
சொல்லிச் சொல்லி
என்னை கேலி
செய்கின்றன
என் முத்தங்கள்..





கொஞ்சம் சத்தம்
இல்லாமல்
முத்தம் கொடுத்துத்
தொலையேண்டி
நான் வேண்டுமானால்
எப்படி என
கத்துக்கொடுக்கவா..?






உனக்கே உனக்கான
நானும்
எனக்கே எனக்கான
நீயும்
நமக்கே நமக்காக
நம்மைக் கட்டிக்கொள்ளலாமா..?



77 கருத்துகள்:

Divya சொன்னது…

ஆஹா !! நவீன்......சூப்பரு.....சிம்பிளி சூப்பருங்க கவிதை, கலக்கல்ஸ்!!

Divya சொன்னது…

\\ஹய்யோ போடா எனக்கு
வெட்கமா இருக்கு
என நீ சொல்ல சொல்ல
உன்னிடம் ஊற்றெடுக்கும்
வெட்கங்களை பருகவே
விளைகிறேன்
தெரியுமா..?\\

வெட்கங்கள் ஊற்றெடுக்குமா????
எங்க இருந்துங்க சார் உங்களூக்கு மட்டும் இப்படி அழகான வார்த்தைகள் கிடைக்குது??

Divya சொன்னது…

\\கொடுக்க கொடுக்க
வளரும் செல்வம் கல்வி
மட்டும் அல்ல
என் செல்லமே..
உன் முத்தமும் தான்...\

அட்டகாசமா இருக்கு இந்த வரிகள்!!

வர வர உங்க கவி வரிகள் ரொம்ப ரொமெண்டிக்கா ஆகிட்டே போகுதுங்கோ......என்ன மேட்டருங்க கவிஞரே???

Dreamzz சொன்னது…

கவிதை ஒன்றொன்றும் அருமை.. ரசித்தேன்...

எழில்பாரதி சொன்னது…

எப்போதும் போல‌
க‌விதைக‌ள் அனைத்தும் சூப்ப‌ர்!!!

வாழ்த்துக‌ள் ந‌வின்

Divya சொன்னது…

\\\இனிமேல் கண்ட இடத்தில்
எல்லாம் தொடாதே என
சொல்கிறாய் அப்போ
யாரும் காணாத இடத்தில்
என்றால் சரியாடி..?\\


ஹைலைட் ஆஃப் யுவர் ரொமேன்ஸ்,
செல்ல சீண்டல்கள் ரொம்ப அழகாக இருக்கிறது.

Praveena சொன்னது…

\\ஹய்யோ வேணாம்டா
ப்ளீஸ் என நீ சொன்னாலே
வேணும்டா ப்ளீஸ் என
நான் அர்த்தம் பண்ணிக்
கொள்கிறேனாம்...
சொல்லிச் சொல்லி
என்னை கேலி
செய்கின்றன
என் முத்தங்கள்..\\

சில சில சீனுங்களில்
பல பல அர்த்தங்களை
சின்ன சின்ன வார்த்தைகளுக்குள்
அழகாக பதித்து
காதலுடன்
கவிதை அருமை நவீன்!!

நித்யன் சொன்னது…

அன்பருக்கு...

முத்தங்களை விதைத்துக்கொண்டே போனால் வெட்கங்கள் விளைந்து கொண்டே போகும். பிறகென்ன ஒரே கொண்டாட்டம்தான்.

விதைத்தலும் அறுவடையும் ஒரே நாளில்... அது காதல் களத்தில் மட்டும்தான்.

வாழிய...

அன்பு நித்யகுமாரன்

Naresh Kumar சொன்னது…

வெட்கப் பட்டுக் கொண்டு இருக்கும் பெண் மட்டுமல்ல, வெட்கப்படுத்தும் ஆணும் அழகுதான்.

முத்தங்களில் மட்டுமல்ல, காதல் கவிதைகள் தருவதிலும் கஞ்சன் இல்லை என்று நிரூபிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

இராம்/Raam சொன்னது…

நல்ல கவிதைகள்.... :)

FunScribbler சொன்னது…

//ஹய்யோ வேணாம்டா
ப்ளீஸ் என நீ சொன்னாலே
வேணும்டா ப்ளீஸ் என
நான் அர்த்தம் பண்ணிக்
கொள்கிறேனாம்...
சொல்லிச் சொல்லி
என்னை கேலி
செய்கின்றன
என் முத்தங்கள்..//

அழகாய் உள்ளன. ரசித்து படித்தேன். வாழ்த்துகள்! எப்போது போலவே கலக்குங்க..

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
ஆஹா !! நவீன்......சூப்பரு.....சிம்பிளி சூப்பருங்க கவிதை, கலக்கல்ஸ்!!//

வாங்க திவ்யா....:))

கலக்கல்ஸ்..?? அப்ப்டின்னா என்னாங்க திவ்யா..? :))) சிம்பிளா வந்து சூப்பரா கலக்கியதற்கு மிக்க நன்றி !! :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\ஹய்யோ போடா எனக்கு
வெட்கமா இருக்கு
என நீ சொல்ல சொல்ல
உன்னிடம் ஊற்றெடுக்கும்
வெட்கங்களை பருகவே
விளைகிறேன்
தெரியுமா..?\\

வெட்கங்கள் ஊற்றெடுக்குமா????
எங்க இருந்துங்க சார் உங்களூக்கு மட்டும் இப்படி அழகான வார்த்தைகள் கிடைக்குது?? //

வாங்க திவ்யா :)))
ஏன் வெட்கங்களும் ஊற்றெடுக்கும்... காதல் கொண்ட பெண்ணிடம்... :))) உங்கள் கதைகளில் வரும் உரையாடல்களைவிடவா நான் ஏதும் எழுதிவிடப்போகிறேன்...?? :)))))

ரசிகன் சொன்னது…

அருமையா இருக்கு:)
ஒவ்வொரு பாராவையும் ரசித்தேன். சூப்பர்:)

ஸ்ரீ சொன்னது…

தல இந்த பின்னூட்டம் பிறந்தநாளுக்கு:) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பதிவை இன்னும் படிக்கலை படிச்சுட்டு வரேன் :)

ஸ்ரீ சொன்னது…

உனக்கே உனக்கான
நானும்
எனக்கே எனக்கான
நீயும்??

ஆத்தி புதுசா இருந்தாலும் அழகா இருக்கே நவீன் சூப்பர் :)))

Praveena சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழரே!

பெயரில்லா சொன்னது…

\\ச்சீய் இப்படியெல்லாமா
ரசிப்பாய் என என்ன
நீ சாதாரணமாகக்
கேட்கிறாய்..?
நீ ச்ச்சீய் சொல்லும்
அழகுக்கு முன்
எவளுமே நிற்க முடியாது
தெரியுமா..? \

எவளுமே நிற்க முடியாதா??.......அப்போ உட்கார முடியுமோ??

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\கொடுக்க கொடுக்க
வளரும் செல்வம் கல்வி
மட்டும் அல்ல
என் செல்லமே..
உன் முத்தமும் தான்...\

அட்டகாசமா இருக்கு இந்த வரிகள்!!

வர வர உங்க கவி வரிகள் ரொம்ப ரொமெண்டிக்கா ஆகிட்டே போகுதுங்கோ......என்ன மேட்டருங்க கவிஞரே???//

திவ்யா :)))
அட்டகாசமா இருக்கா..?? நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்... :))

ரொமாண்டிக்கா ஆகிட்டே இருக்கா..?? எல்லாம் உங்கள் மாதிரி ரசிகர்கள் ஆசீர்வாதம் தாங்க காரணம் :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Dreamzz said...
கவிதை ஒன்றொன்றும் அருமை.. ரசித்தேன்...//

வாங்க கனவுக்காரரே:)))
அருமையாக தருகைக்கும் மிக்க நன்றி !! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// எழில்பாரதி said...
எப்போதும் போல‌
க‌விதைக‌ள் அனைத்தும் சூப்ப‌ர்!!!

வாழ்த்துக‌ள் ந‌வின்//

வாங்க எழில் :))
அப்படியா..?? மிக்க நன்றி வருகைக்கும் ... தருகைக்கும்....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\\இனிமேல் கண்ட இடத்தில்
எல்லாம் தொடாதே என
சொல்கிறாய் அப்போ
யாரும் காணாத இடத்தில்
என்றால் சரியாடி..?\\


ஹைலைட் ஆஃப் யுவர் ரொமேன்ஸ்,
செல்ல சீண்டல்கள் ரொம்ப அழகாக இருக்கிறது.//

:)) திவ்யா :))
சீண்டல்கள் செல்லமாக இருக்கும் வரை அழகுதானே..?? :)))மிக்க நன்றி !!!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Praveena Jennifer Jacob said...
\\ஹய்யோ வேணாம்டா
ப்ளீஸ் என நீ சொன்னாலே
வேணும்டா ப்ளீஸ் என
நான் அர்த்தம் பண்ணிக்
கொள்கிறேனாம்...
சொல்லிச் சொல்லி
என்னை கேலி
செய்கின்றன
என் முத்தங்கள்..\\

சில சில சீனுங்களில்
பல பல அர்த்தங்களை
சின்ன சின்ன வார்த்தைகளுக்குள்
அழகாக பதித்து
காதலுடன்
கவிதை அருமை நவீன்!!//

வாங்க ப்ரவீணா..:)))
எப்படி இருக்கிறீர்கள் ?? :)))
பல பல அர்த்தங்களா..?? அப்படியா என்ன..?? :))) அழகான வார்த்தைகளுடன் வந்து மொழிந்தமைக்கு மிக்க நன்றி ஜெனிபர் !! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நித்யகுமாரன் said...
அன்பருக்கு...

முத்தங்களை விதைத்துக்கொண்டே போனால் வெட்கங்கள் விளைந்து கொண்டே போகும். பிறகென்ன ஒரே கொண்டாட்டம்தான்.

விதைத்தலும் அறுவடையும் ஒரே நாளில்... அது காதல் களத்தில் மட்டும்தான்.

வாழிய...

அன்பு நித்யகுமாரன்//

வாருங்கள் நித்யக்குமாரன் :)))

உங்க விமர்சனமே கவிதையாக இருக்கிறதே... வார்த்தைகள் புது நாற்றைப்போல பசுமையாக இருக்கின்றன மிக ரசித்தேன்... மேலும் வந்து என் களத்தில் விளைச்சலை அதிகரியுங்கள் தோழரே !! :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Naresh Kumar said...
வெட்கப் பட்டுக் கொண்டு இருக்கும் பெண் மட்டுமல்ல, வெட்கப்படுத்தும் ஆணும் அழகுதான்.

முத்தங்களில் மட்டுமல்ல, காதல் கவிதைகள் தருவதிலும் கஞ்சன் இல்லை என்று நிரூபிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!//

வாருங்கள் நரேஷ் :)))
வெட்கப்படுத்துபவரும் அழகா..?? :))) அஹா... :))
கஞ்சமில்லாத தருகைக்கும் மிக்க நன்றி நரேஷ் !!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இராம்/Raam said...
நல்ல கவிதைகள்.... :)//

வாருங்கள் ராம் :)))
மிக்க நன்றி !!! தவறாத வருகை எனக்கு பேருவகை !!! :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Thamizhmaagani said...
//ஹய்யோ வேணாம்டா
ப்ளீஸ் என நீ சொன்னாலே
வேணும்டா ப்ளீஸ் என
நான் அர்த்தம் பண்ணிக்
கொள்கிறேனாம்...
சொல்லிச் சொல்லி
என்னை கேலி
செய்கின்றன
என் முத்தங்கள்..//

அழகாய் உள்ளன. ரசித்து படித்தேன். வாழ்த்துகள்! எப்போது போலவே கலக்குங்க..//

வாங்க தமிழ் :))))
எப்படி இருக்கிறீர்கள் !! ரசிப்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தமிழ் !!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// sathish said...
:)//

வாங்க சதிஷ் :))
:) நன்றி :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ரசிகன் said...
அருமையா இருக்கு:)
ஒவ்வொரு பாராவையும் ரசித்தேன். சூப்பர்:)//

வாங்க ரசிகன் :))))
ரசிகனே ரசித்தீர்களா..?? :))) மிக்க நன்றி :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஸ்ரீ said...
தல இந்த பின்னூட்டம் பிறந்தநாளுக்கு:) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பதிவை இன்னும் படிக்கலை படிச்சுட்டு வரேன் :)//

வாங்க ஸ்ரீ :)))
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !!!:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஸ்ரீ said...
உனக்கே உனக்கான
நானும்
எனக்கே எனக்கான
நீயும்??

ஆத்தி புதுசா இருந்தாலும் அழகா இருக்கே நவீன் சூப்பர் :)))//

வாங்க ஸ்ரீ :)))
ஆத்தி..?? !!! :)))) மிக்க நன்றி ஸ்ரீ !! :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Praveena Jennifer Jacob said...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழரே!//

வாங்க ப்ரவீணா :))))
மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு.... :))) எப்போது மலரும் உங்கள் கவிதைகள் ..?? :)))

நிவிஷா..... சொன்னது…

Belated Birthday Wishes :-)


natpodu
Nivisha

நிவிஷா..... சொன்னது…

\\ஏற்கனவே அழகாக
இருக்கும்
உன்னை
மேலும் அழகாகக்கத்தான்
உன்னை
வெட்கப்படுத்துகிறேன்
தெரியுமா..?\\

unga kavithaiyai azhagu paduthukirathu intha lines :-)

natpodu
Nivisha

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Anonymous said...
\\ச்சீய் இப்படியெல்லாமா
ரசிப்பாய் என என்ன
நீ சாதாரணமாகக்
கேட்கிறாய்..?
நீ ச்ச்சீய் சொல்லும்
அழகுக்கு முன்
எவளுமே நிற்க முடியாது
தெரியுமா..? \

எவளுமே நிற்க முடியாதா??.......அப்போ உட்கார முடியுமோ?? //

வாங்க அனானி :)))
இப்படியெல்லாம் கேட்டால் என்ன அர்த்தம்..?? ;))) அவள்
incomparable அப்படீன்னு அர்த்தம்.. போதுமா...?? ;)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நிவிஷா..... said...
Belated Birthday Wishes :-)


natpodu
Nivisha //

மிக்க நன்றி.... வாழ்த்துகளுக்கு நிவிஷா..:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நிவிஷா..... said...
\\ஏற்கனவே அழகாக
இருக்கும்
உன்னை
மேலும் அழகாகக்கத்தான்
உன்னை
வெட்கப்படுத்துகிறேன்
தெரியுமா..?\\

unga kavithaiyai azhagu paduthukirathu intha lines :-)

natpodu
Nivisha //

வாங்க நிவிஷா..:)))
அப்படியா... அழகு படுத்துவது வரிகள் மட்டுமல்ல... உங்களின் வருகையும் தான்.. மிக்க நன்றி !!! :))

நிவிஷா..... சொன்னது…

\\ நவீன் ப்ரகாஷ் said...
//நிவிஷா..... said...
\\ஏற்கனவே அழகாக
இருக்கும்
உன்னை
மேலும் அழகாகக்கத்தான்
உன்னை
வெட்கப்படுத்துகிறேன்
தெரியுமா..?\\

unga kavithaiyai azhagu paduthukirathu intha lines :-)

natpodu
Nivisha //

வாங்க நிவிஷா..:)))
அப்படியா... அழகு படுத்துவது வரிகள் மட்டுமல்ல... உங்களின் வருகையும் தான்.. மிக்க நன்றி !!! :))\\

aoyoooo,
'நன்றி , மீண்டும் வருக' appadinnu sonna , thirumbavum unga kadaiku vara matoma sir,
athukunu unga 'varugaiyum ' alagunu kavi paadureengley sir, ithellam threeeee much :))

High Power Rocketry சொன்னது…

: )

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\கொடுக்க கொடுக்க
வளரும் செல்வம் கல்வி
மட்டும் அல்ல
என் செல்லமே..
உன் முத்தமும் தான்...\

அட்டகாசமா இருக்கு இந்த வரிகள்!!

//வர வர உங்க கவி வரிகள் ரொம்ப ரொமெண்டிக்கா ஆகிட்டே போகுதுங்கோ......என்ன மேட்டருங்க கவிஞரே???//

கேடகணும்னு நினைச்சேன்...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

உங்களுக்கே உரிய அழகு நடையில் அழகாய் அழகாய் காதல்..சொல்லியிருக்கிறீர்கள் அண்ணன், உங்கள் வரிகளில் தனியாக பாராட்ட வரிகள் கிடைப்பதில்லை எனக்கு...

எல்லாமே அழகான வரிகள்தானே...

Divya சொன்னது…

\\ஏற்கனவே அழகாக
இருக்கும்
உன்னை
மேலும் அழகாகக்கத்தான்
உன்னை
வெட்கப்படுத்துகிறேன்
தெரியுமா..?\\

எப்போதிலிருந்து 'அழகு கலை' நிபுனர் ஆனீங்க????

Divya சொன்னது…

\\சின்னவயது உடைகளோ
சின்னதான உடைகளோ
தூக்கிப்போடாதேடி
உனக்கு வேண்டுமானால்
அவை சின்னதான உடையாக
இருக்கலாம்
ஆனால் எனக்கு அவை
காதல் சின்னமான
உடைகள்
தெரியுமா..?\

பழைய பேப்பர், பாத்திரம், துணி.....வாங்கிக்கிற கடை ஏதும் வைச்சிருக்கிறீங்களா??

Divya சொன்னது…

\\ஒரேயொரு முத்தம் கொடுக்க
எப்படியெல்லாம் கெஞ்ச
விடுவாய் ?
உன்னைப் போல நான்
கஞ்சன் இல்லை என
நிரூபிக்க போகிறேன் பார்..
தயாராக இருடி..\\

இதில் மட்டும் 'வள்ளல்' பரம்பரையோ??

Divya சொன்னது…

\\ஹய்யோ வேணாம்டா
ப்ளீஸ் என நீ சொன்னாலே
வேணும்டா ப்ளீஸ் என
நான் அர்த்தம் பண்ணிக்
கொள்கிறேனாம்...
சொல்லிச் சொல்லி
என்னை கேலி
செய்கின்றன
என் முத்தங்கள்..\\

இப்படி 'எதிர் மறை'ஆக அர்த்தம் பண்ணிக்கொள்ள வைப்பதும் ஒரு அழகு,
அருமையான கற்பனை கவிஞரே!!

Praveena சொன்னது…

\\கொஞ்சம் சத்தம்
இல்லாமல்
முத்தம் கொடுத்துத்
தொலையேண்டி
நான் வேண்டுமானால்
எப்படி என
கத்துக்கொடுக்கவா..?\\

சித்தம் கலங்கடிக்கும்
சில சத்தம்
காதல்
முத்தத்தில் மட்டுமே
சாத்தியம்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//R2K said...
: )//

வாங்க R2K :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்... said...
\\கொடுக்க கொடுக்க
வளரும் செல்வம் கல்வி
மட்டும் அல்ல
என் செல்லமே..
உன் முத்தமும் தான்...\

அட்டகாசமா இருக்கு இந்த வரிகள்!!//

வாங்க தமிழன் :))
அப்படியா..?? மிக்க நன்றி !! :)))

//வர வர உங்க கவி வரிகள் ரொம்ப ரொமெண்டிக்கா ஆகிட்டே போகுதுங்கோ......என்ன மேட்டருங்க கவிஞரே???//

கேடகணும்னு நினைச்சேன்... //

கேட்கணும்னு தானே நெனச்சீங்க.?? கேட்கலை இல்லையா..?? :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...
உங்களுக்கே உரிய அழகு நடையில் அழகாய் அழகாய் காதல்..சொல்லியிருக்கிறீர்கள் அண்ணன், உங்கள் வரிகளில் தனியாக பாராட்ட வரிகள் கிடைப்பதில்லை எனக்கு...

எல்லாமே அழகான வரிகள்தானே...//

வாங்க தமிழன் :))))
பாராட்ட வரிகள் கிடைக்கவில்லையா..?? :)) மிகவும் ரசித்தேன்... மிக்க நன்றி தமிழன் தமிழான வருகைக்கும் மிக அழகான தருகைக்கும்... :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\ஏற்கனவே அழகாக
இருக்கும்
உன்னை
மேலும் அழகாகக்கத்தான்
உன்னை
வெட்கப்படுத்துகிறேன்
தெரியுமா..?\\

எப்போதிலிருந்து 'அழகு கலை' நிபுனர் ஆனீங்க???? //

வாங்க திவ்யா :)))
அட உங்களுக்கு தெரியாதா நான் ஒரு அழகு ரசிகன் என..? ரசிப்பவனுக்கு தெரியதா எது அழகாக இருக்கும் என... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\சின்னவயது உடைகளோ
சின்னதான உடைகளோ
தூக்கிப்போடாதேடி
உனக்கு வேண்டுமானால்
அவை சின்னதான உடையாக
இருக்கலாம்
ஆனால் எனக்கு அவை
காதல் சின்னமான
உடைகள்
தெரியுமா..?\

பழைய பேப்பர், பாத்திரம், துணி.....வாங்கிக்கிற கடை ஏதும் வைச்சிருக்கிறீங்களா?? //

:)))) இதுவரை இல்லை.... இனிமே ஆரம்பிச்சா சொல்லறேன் திவ்யா .. நீங்களே வந்து ரிப்பன் வெட்டி திறந்து வச்சுருங்க.. ஓகேவா..?? :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\ஒரேயொரு முத்தம் கொடுக்க
எப்படியெல்லாம் கெஞ்ச
விடுவாய் ?
உன்னைப் போல நான்
கஞ்சன் இல்லை என
நிரூபிக்க போகிறேன் பார்..
தயாராக இருடி..\\

இதில் மட்டும் 'வள்ளல்' பரம்பரையோ?? //

:))) பின்னே..?? நாம எல்லாம் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல் வழித்தோன்றல்கள் அல்லவா...? இது கூட கொடுக்காட்டி எப்படி..?? :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\ஹய்யோ வேணாம்டா
ப்ளீஸ் என நீ சொன்னாலே
வேணும்டா ப்ளீஸ் என
நான் அர்த்தம் பண்ணிக்
கொள்கிறேனாம்...
சொல்லிச் சொல்லி
என்னை கேலி
செய்கின்றன
என் முத்தங்கள்..\\

இப்படி 'எதிர் மறை'ஆக அர்த்தம் பண்ணிக்கொள்ள வைப்பதும் ஒரு அழகு,
அருமையான கற்பனை கவிஞரே!! //

எதிர் மறை..?? :))) அழகாக இருக்குமா என்ன..? எனக்கு தெரியாதே திவ்யா..!!! நீங்க சொன்னா சரிதாங்க.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Praveena Jennifer Jacob said...
\\கொஞ்சம் சத்தம்
இல்லாமல்
முத்தம் கொடுத்துத்
தொலையேண்டி
நான் வேண்டுமானால்
எப்படி என
கத்துக்கொடுக்கவா..?\\

சித்தம் கலங்கடிக்கும்
சில சத்தம்
காதல்
முத்தத்தில் மட்டுமே
சாத்தியம்... //

வாங்க ப்ரவீணா :)))))

ஆஹா உங்க விமர்சனமே ஒரு கவிதையா இருக்குதே ஜெனிபர் !!!! சில சத்தம் மட்டுமல்ல சித்தம் கலங்கடிக்க.. இப்படிப் பட்ட சில அழகிய விமர்சனங்களும் தான்.... :)))) மிக ரசித்தேன்....மிக்க நன்றி...

சத்யா சொன்னது…

unga kavidhiyum kaadhalum arumai! naanum puthusa kadai thiranthu irukken naveen.

தமிழன்-கறுப்பி... சொன்னது…

அண்ணன் ஒரு பதிவு போடுங்க...
நன்றி எனக்கான உங்கள உற்சாகத்துக்கும் பாராட்டுக்கும்...

புகழன் சொன்னது…

//ஏற்கனவே அழகாக
இருக்கும்
உன்னை
மேலும் அழகாகக்கத்தான்
உன்னை
வெட்கப்படுத்துகிறேன்
தெரியுமா..?
//
அழகிய வரிகள்
கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை.
இன்னும் கொஞ்சம் கொஞ்சலுடன் மெருகேற்றலாம்.
இப்படிக்கு புகழன்

THOTTARAYASWAMY.A சொன்னது…

இனிமேல் கண்ட இடத்தில்
எல்லாம் தொடாதே என
சொல்கிறாய் அப்போ
யாரும் காணாத இடத்தில்
என்றால் சரியாடி..?

சூப்பரு...
nice ... love and love only...


kavithaigal engum padikkalam
www.thottarayaswamy.net
or
www.thottarayaswamy.tamilblogs.com

Uma சொன்னது…

first time in ur blog

super lines....

konjam konjal konjam kenjal....

is this ur state of mind?

பெயரில்லா சொன்னது…

அன்புள்ள நவீன் பிரகாஷ்!
உங்கள் கவிதைகளை இந்தவாரக் குமுதத்தில் பாராட்டியுள்ளார் எழுத்தாளர் பாமரன்(http://www.kumudam.com/magazine/Kumudam/2008-04-30/pg17.php):

//கடைசியாய் இந்த ஒரு தலைக்காதல்களும் வேண்டாம்......கவிதைகளும் வேண்டாம் என்று தூக்கிக் கடாசும் போது வயது முப்பதைத் தொட்டு விட்டது.

போனவாரம் கம்ப்யூட்டரின் இணைய தளங்களில் மேய்ந்து கொண்டிருந்தவன் கண்ணுக்கு சட்டென்று தட்டுப்பட்டது ஒரு பகுதி. அச்சு அசலான காதல் கவிதைகள். ஒவ்வொன்றும் அசத்தல் அசத்தலாய்......அதுவும் நம்மை மீண்டும் கல்லூரிக் காலத்துக்கே கொண்டுபோய் நிறுத்தும் விதத்தில். எழுதிய மகராசன் நவீன் பிரகாஷ். வேலை கணினித் துறையில்......எழுதுவதோ கிறங்கடிக்கும் கவிதைகள். ஒரு பானை சோற்றுக்கு இதோ ஓரிரு பருக்கைகள்......

நீ
கோபப்பட்டால்
அழகாய் இருக்கிறாய்
என சொன்னதற்காக
இப்படி அடிக்கடி
கோபப்பட்டால்
எப்படி?

முடிந்து விட்ட நம்
சண்டையில் யார் ஆரம்பித்தது
இந்த சண்டையை என்ற
சண்டையைப் புதிதாக
ஆரம்பித்து விட்டாய்
ஏனடி இப்படி?

காதலில் மட்டுமில்லை...... மற்றதிலும் நாங்க கில்லாடிதான்... என்கிற விதத்தில்......
மதம் மனிதனை
பிடித்தது
மனிதனுக்கு மதம்
பிடித்தது
பிறகு மனிதனுக்கு
மனிதனையே
பிடிக்கவில்லை
என தூள் கிளப்பியிருக்கிறார் இளைஞர் நவீன் பிரகாஷ். படிக்கப் படிக்க நமக்கே இன்னொரு முறை காதலித்தால்தான் என்ன? என்று தோன்றுகிறது.
இணைய தளங்களில் இதுவரை இளைப்பாறியது போதும். இதுகளப் புத்தகமாப் போடற வழியப் பாருங்க தம்பி.//

அவர் பரிந்துரையில் இங்கு வந்த எனக்கு உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியம்! தபூசங்கர் வகையறாக்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுட்டீங்க! வாழ்த்துக்கள்! ரொம்ப நல்லா எழுதறீங்க! கூகுள் ரீடரில உங்க வலைப்பதிவை இணைச்சுட்டேன்!

நன்றி
வெங்கட்ரமணன்
(venkatramanan [at] gmail [dot] com

சிறில் அலெக்ஸ் சொன்னது…

நவீன் பாமரன் உங்களைப்பத்தி எழுதியிருக்கார் குமுதத்துல பாத்தீங்களா.

http://www.kumudam.com/magazine/Kumudam/2008-04-30/pg17.php

புத்தகம் போடுங்க சீக்கிரம்.

நிவிஷா..... சொன்னது…

egxkoojme:))
unga kavithai mela ungaluku kopama?
OR
unga kavithai unga kooda sandaiya?

yein remba naala kavuja...zory, kavithaiyey kanoam unga blog yil??


natpodu
Nivisha.

Divya சொன்னது…

உங்கள் கவிதைகளை இந்தவாரக் குமுதத்தில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் நவீன்!!

உங்கள் எழுத்துக்களுக்கு கிடைத்த அங்கீகாரத்திற்கு மனம்மார்ந்த பாராட்டுக்க்கள்,

மேலும் தொடர்ந்து பல கவிதைகள் படைத்திட வாழ்த்துக்கள்!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// சத்யா said...
unga kavidhiyum kaadhalum arumai! naanum puthusa kadai thiranthu irukken naveen.//

வாங்க சத்யா :))
மிக்க நன்றி !! அட நீங்கள் புதிதாக எழுத வந்திருக்கிறீர்களா..?? வாழ்த்துக்கள் ! கண்டிப்பாக வருகிறேன்.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...
அண்ணன் ஒரு பதிவு போடுங்க...
நன்றி எனக்கான உங்கள உற்சாகத்துக்கும் பாராட்டுக்கும்...//

வாங்க தமிழன் :)))
கண்டிப்பாக பதிவு எழுதறேன் தமிழன் மிக விரைவில்.... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// மனதோடு மனதாய் said...
//ஏற்கனவே அழகாக
இருக்கும்
உன்னை
மேலும் அழகாகக்கத்தான்
உன்னை
வெட்கப்படுத்துகிறேன்
தெரியுமா..?
//
அழகிய வரிகள்
கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை.
இன்னும் கொஞ்சம் கொஞ்சலுடன் மெருகேற்றலாம்.
இப்படிக்கு புகழன் //

வாங்க புகழன் :))))
மிக்க நன்றி...இன்னும் கொஞ்சம் கொஞ்சலுடனா..?? மெருகேற்றிவிட்டால் போயிற்று... :)))) அடுத்தமுறை முயல்கிறேன்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// umakumar said...
first time in ur blog

super lines....

konjam konjal konjam kenjal....

is this ur state of mind? //

வாங்க உமா :)))
மிக்க நன்றி முதல் வருகைக்கும் அழகான தருகைக்கும்...

//is this ur state of mind?//

:)))))))))))))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Venkatramanan said...
அன்புள்ள நவீன் பிரகாஷ்!
உங்கள் கவிதைகளை இந்தவாரக் குமுதத்தில் பாராட்டியுள்ளார் எழுத்தாளர் பாமரன்(http://www.kumudam.com/magazine/Kumudam/2008-04-30/pg17.php):

அவர் பரிந்துரையில் இங்கு வந்த எனக்கு உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியம்! தபூசங்கர் வகையறாக்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுட்டீங்க! வாழ்த்துக்கள்! ரொம்ப நல்லா எழுதறீங்க! கூகுள் ரீடரில உங்க வலைப்பதிவை இணைச்சுட்டேன்!

நன்றி
வெங்கட்ரமணன் //

வாருங்கள் வெங்கட் :)))
மிக்க நன்றி வெங்கட் முதன் முறையாக வந்தமைக்கு... :)))) எழுத்தாளர் பாமரன் அவர்களுக்கு மிக்க நன்றி !!

ஆஹா தபுசங்கர் அளவுக்கெல்லாம் நான் இன்னும் வளரவில்லைங்க.... ரீடரில் இணைத்ததற்கு மிக்க நன்றி வெங்கட்.. :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// சிறில் அலெக்ஸ் said...
நவீன் பாமரன் உங்களைப்பத்தி எழுதியிருக்கார் குமுதத்துல பாத்தீங்களா.

http://www.kumudam.com/magazine/Kumudam/2008-04-30/pg17.php

புத்தகம் போடுங்க சீக்கிரம்.//

வாருங்கள் சிறில் :)))
ஆமாம் பார்த்தேன்... உடனடியாக பதிலளிக்க இயலவில்லை... மன்னிக்கவும்... புத்தகமா...??:)))) முயற்சிக்கிறேன் சிறில் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//. நிவிஷா..... said...
egxkoojme:))
unga kavithai mela ungaluku kopama?
OR
unga kavithai unga kooda sandaiya? //

வாங்க நிவிஷா :)))
சண்டையும் இல்லை ஒண்ணும் இல்லை.... கவிதையும் நானும் ஒருத்தரை ஒருத்தர் கொஞ்சிக்கொண்டு இருந்த்ததில் பதிவு எழுத மறந்தே போய்விட்டது ;)))))

//yein remba naala kavuja...zory, kavithaiyey kanoam unga blog yil??


natpodu
Nivisha.//

சீக்கிரம் எழுதிடறேன்... போதுமா..?? :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
உங்கள் கவிதைகளை இந்தவாரக் குமுதத்தில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் நவீன்!!

உங்கள் எழுத்துக்களுக்கு கிடைத்த அங்கீகாரத்திற்கு மனம்மார்ந்த பாராட்டுக்க்கள்,

மேலும் தொடர்ந்து பல கவிதைகள் படைத்திட வாழ்த்துக்கள்!!//

வாங்க திவ்யா :)))
மிக்க நன்றி :))) எல்லாம் உங்களைப் போன்றோரின் பாராட்டும் உற்சாகமும் தான் காரணம்... :))))

புகழன் சொன்னது…

என்ன நவீன் ஆளையே காணோம்.
கொஞ்சமா எழுதுனாலும் தொடர்ந்து எழுதுங்கள். அதுவே ஒரு நிறைவைத் தரும்.

பெயரில்லா சொன்னது…

சிபிஅப்பா...

\\கொடுக்க கொடுக்க
வளரும் செல்வம் கல்வி
மட்டும் அல்ல
என் செல்லமே..
உன் முத்தமும் தான்...\\

கொடுக்கும் போதே
கிடைத்து விடுவதும்
முத்தம் மட்டும் தான்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//புகழன் said...
என்ன நவீன் ஆளையே காணோம்.
கொஞ்சமா எழுதுனாலும் தொடர்ந்து எழுதுங்கள். அதுவே ஒரு நிறைவைத் தரும். //

வாங்க புகழன்..
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.. :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சிபிஅப்பா...

\\கொடுக்க கொடுக்க
வளரும் செல்வம் கல்வி
மட்டும் அல்ல
என் செல்லமே..
உன் முத்தமும் தான்...\\

கொடுக்கும் போதே
கிடைத்து விடுவதும்
முத்தம் மட்டும் தான்.//

வாங்க சிபிஅப்பா....:))
அட எப்படி அப்படி சொல்ல முடியும்..? கொடுக்கும் போது எப்பொழுதுமே கிடைத்துவிடுமா என்ன..? ;)))))

Shwetha Robert சொன்னது…

Wah,wah wahhhhhh
such an awesome 'love poem', so nice:)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Shwetha Robert said...

Wah,wah wahhhhhh
such an awesome 'love poem', so nice:) //

வாங்க ஸ்வேதா :)))
இவ்வளவா ரசித்தீர்கள்..??!!!!
மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி :))))