திங்கள், நவம்பர் 10, 2008

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...


கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்...


இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??


உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என‌
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட
வேண்டுமா என்ன..?


அங்கேயெல்லாம்
தொடாதேடா ப்ளீஸ்...
எனக்குக் கூசும் என ஏண்டி
சொல்கிறாய்..?
இப்படி சொன்னால்
எப்படி சும்மா இருக்கும்
என் பிஞ்சுவிரல்கள்... ??


'ஏங்க' என நீ
கூப்பிடும் போதே
ஏங்க ஆரம்பித்துவிடுகிறது
இந்த மனசு...
போய்த்தொலையட்டும்
அதையும் கொஞ்சம்
கொஞ்சிவிட்டுப்போயேன்...


அய்யோ இது சமையல்
அறைங்க...
என சத்தம் போடுகிறாய்
அடிப்பாவி அதற்காக
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
அறையா வைக்கமுடியும்..??


உன்னைத் தொடக்கூடாது
எனத்தானடி சொன்னாய்...?
அப்புறம் இப்படி
காற்றை காதுமடல்களில்
ஊதி கிச்சு கிச்சு
மூட்டுகிறேன் என
எப்படிக்
குற்றப்படுத்தலாம் நீ..?


இனி உனக்கு
கிச்சு கிச்சு மூட்டமாட்டேன் போ...
உன் வெட்கத்தோடு
அழகான கூச்சமும் சேர்ந்து
கொண்டு என்னைக்
கண்டபடி கிறங்கடிக்கிறது..
என்னடி செய்வேன் ...?


எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்கிறாய்...
அப்படியெல்லாம்
இல்லை செல்லம்
அப்போ அப்போ
உன் நெனப்பும் வரும்
எனச்சொன்னால்
ஏண்டி என்னை
முறைக்கிறாய்..?


அய்யோ சும்மா
இருடா மருதாணி
கலைந்துவிடும்
எனப் புலம்புகிறாய்...
கவலைப்படாதே..
மருதாணியை எல்லாம்
கலைக்க மாட்டேன்
சரியாடி செல்லம்..?


இனி இரண்டு கைகளிலும்
மருதாணி வைத்துக்கொள்ளடி
உன் முந்தானையை
சரி செய்யத்தான் நான்
இருக்கிறேனே..


கல்யாணம் ஆனபின்பு நான்
சேலை மட்டும் தான்
கட்டிக்கொள்ள வேண்டுமா
என் ஏண்டி கேட்கிறாய்...
தேவையில்லை...
என்னையும்
கட்டிக்கொள்ளலாம்..



இரண்டு கைகளிலும்
நான் வைத்திருக்கும்
மருதாணி அழகாக இருக்கிறதாடா
எனக் கேட்கிறாயே
செல்லக்குட்டி
இரண்டு கைகளுக்குள்ளும்
என்னை வைத்துக்கொண்டால்
இன்னும் அழகாக இருப்பாய்
தெரியுமா..?



148 கருத்துகள்:

Divya சொன்னது…

மருதாணி ' காதல்' வாசம் வீசுகிறது கவிதை முழுவதும்.........அற்புதமான கற்பனை வளம் உங்களுக்கு, பாராட்டுக்கள் கவிஞரே!!!

Divya சொன்னது…

\\கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்... \\


ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு இந்த வரிகள்.........
'கையில் நீ இருக்கும் தைரியத்தில்' கியூட்டா இருக்கு:))

Divya சொன்னது…

\\உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என‌
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட
வேண்டுமா என்ன..? \\



ஆஹா.......எப்படி இப்படியெல்லாம்??
சூப்பர்ப்:)))

Divya சொன்னது…

\\ஏங்க' என நீ
கூப்பிடும் போதே
ஏங்க ஆரம்பித்துவிடுகிறது
இந்த மனசு...
போய்த்தொலையட்டும்
அதையும் கொஞ்சம்
கொஞ்சிவிட்டுப்போயேன்... \\


'ஏங்க' ன்ற வார்த்தை வைச்சு மனசு 'ஏங்கு'வதை மிக மிக அழகா இந்த வரிகளில் எழுதியிருக்கிறீங்க.........அட்டகாசம்!!

Divya சொன்னது…

வழக்கம்போல் குறும்புகள்
கறும்பாய் தித்திக்கிறது
உங்கள் கவிதையில்........வாழ்த்துக்கள்!!

பெயரில்லா சொன்னது…

Adadadadadadaaaaaaaaaaaaaaaaa Kavinjare naan poi thoonganumla en ippadi?

Sokka iruku pa

MSK / Saravana சொன்னது…

வெகுநாட்களாக பதிவு போடாததை மிக கடுமையாய் கண்டிக்கிறேன்..

MSK / Saravana சொன்னது…

//கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்...//

தெய்வமே.. எங்கயோ போயிடீங்க.. கலக்கல்..

MSK / Saravana சொன்னது…

உங்களுக்கு மட்டுமே எப்படித்தான் இப்படியெல்லாம் தோணுதோ.. கலக்றீங்க... எல்லாமே சூப்பர்..

MSK / Saravana சொன்னது…

//அய்யோ இது சமையல்
அறைங்க...
என சத்தம் போடுகிறாய்
அடிப்பாவி அதற்காக
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
அறையா வைக்கமுடியும்..??//

சான்ஸே இல்லை.. :)

MSK / Saravana சொன்னது…

உங்க கவிதைகளை படிக்கும் கொஞ்சம் வயித்தெரிச்சலாவும் பொறாமையாவும் இருக்கு..

பெயரில்லா சொன்னது…

//மருதாணி ' காதல்' வாசம் வீசுகிறது கவிதை முழுவதும்.........அற்புதமான கற்பனை வளம் உங்களுக்கு, பாராட்டுக்கள் கவிஞரே!!!
//

வழிமொழிகிறேன்!

ஹிஹி!

புதியவன் சொன்னது…

எந்தக் கவிதையை குறிப்பிட்டுச் சொல்வது என்று தெரியவில்லை எல்லாக் கவிதையையும் குறிப்பிடால் நகல் எடுத்த மாதிரி தெரியும்.
ஆனால், ஒன்று உங்கள் கவிதைகளைப் படிப்பவர் முகம் மருதாணியிட்ட கைகளைப் போல் சிவப்பது என்னவோ உறுதி...வழ்த்துக்கள் நவீன்.

FunScribbler சொன்னது…

அனைத்து கவிதைகளும் சூப்பர்!

//அய்யோ இது சமையல்
அறைங்க...
என சத்தம் போடுகிறாய்
அடிப்பாவி அதற்காக
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
அறையா வைக்கமுடியும்..??//

நவீனின் ultimate touch கவிதையில் மிளிர்கிறது. சூப்பர்! வாழ்த்துகள்

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

காதலின் சில்மிஷங்களையும் கொஞ்சல்களையும் மருதாணி கலந்து எழுதியிருக்கும் ஒவ்வொரு வரிகளும் பிரமாதம்.
வரிகளோடு இணைந்து கற்பனையையும் கூட்டுகின்றன.

நன்றாயிருக்கிறது நவீன்.

Unknown சொன்னது…

//கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்...//
Kurummuukal thodakam, ennyenel nee enn kaee ahadakam..

Unknown சொன்னது…

//இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??//
ahmaa ullalum sillirukuthu...

Unknown சொன்னது…

//

உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என‌
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட
வேண்டுமா என்ன..? //
Kaallakal kavigaaree

Unknown சொன்னது…

//
அங்கேயெல்லாம்
தொடாதேடா ப்ளீஸ்...
எனக்குக் கூசும் என ஏண்டி
சொல்கிறாய்..?
இப்படி சொன்னால்
எப்படி சும்மா இருக்கும்
என் பிஞ்சுவிரல்கள்... ??//
thodallal than kuchamm pookuum illaya..

Unknown சொன்னது…

//அய்யோ சும்மா
இருடா மருதாணி
கலைந்துவிடும்
எனப் புலம்புகிறாய்...
கவலைப்படாதே..
மருதாணியை எல்லாம்
கலைக்க மாட்டேன்
சரியாடி செல்லம்..?//
:)

Unknown சொன்னது…

அச்சச்சோ அண்ணா ரொம்ப சூப்பரா இருக்கு.... :))) கைல மருதாணி வெச்சிருந்ததால தான் இவ்ளோ நாளா பதிவு போடலியா?? ;)) மருதாணி ரொம்ப சிவந்து போச்சு அண்ணா போதும்.. ;))

Unknown சொன்னது…

//கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்...//

:)) Cute.. :))

Unknown சொன்னது…

//இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??//

:))

Unknown சொன்னது…

//இரண்டு கைகளிலும்
நான் வைத்திருக்கும்
மருதாணி அழகாக இருக்கிறதாடா
எனக் கேட்கிறாயே
செல்லக்குட்டி
இரண்டு கைகளுக்குள்ளும்
என்னை வைத்துக்கொண்டால்
இன்னும் அழகாக இருப்பாய்
தெரியுமா..?//

ம்ஹும்... :))

Unknown சொன்னது…

எல்லா கவிதையுமே சூப்பர் அண்ணா :)))))))

பெயரில்லா சொன்னது…

இந்த கொஞ்சல்களுக்காக எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் காத்திருக்கலாம்... மருதாணியும் காதல் பேசுவது அழகுதான்.பாராட்டுகள்!!

எழில்பாரதி சொன்னது…

அருமையான கவிதைகள்!!!!

சென்ஷி சொன்னது…

கவிதையெல்லாமே கலக்கலாயிருக்குது நவீன்!

எழில்பாரதி சொன்னது…

எல்லா கவிதைகளும் அருமை...
தனித் தனியா சொல்ல முடியாத அளவுக்கு!!!!

உங்க வலைப்பூ இன்று மருதாணியாய் மணக்கிறது!!!

Revathyrkrishnan சொன்னது…

கைகள் சிவக்க வைக்கும் மருதாணி கொண்டு கன்னம் சிவக்கச்செய்து விட்டீர்கள் நவீன் தங்கள் கவிதைகளால்... அழகு ததும்பி வழிகிறது கவிதையிலும் காதலிலும்... வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

மருதாணி யின் வாசத்தை நுகர முடிகிறது கவிதைகளில்....
வாழ்த்துக்கள் கவிஞரே.......
தொடரட்டும் உமது கவிதை பயணம்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

மருதாணி ' காதல்' வாசம் வீசுகிறது கவிதை முழுவதும்.........அற்புதமான கற்பனை வளம் உங்களுக்கு, பாராட்டுக்கள் கவிஞரே!!! //

வாங்க திவ்யா...

காதாசிரியரை விடவா கற்பனை வளம் எனக்கு..? !! அதெல்லாம் இல்லை திவ்யா..

மிக்க மகிழ்ச்சி... !! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

\\கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்... \\


ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு இந்த வரிகள்.........
'கையில் நீ இருக்கும் தைரியத்தில்' கியூட்டா இருக்கு:)) //

தருகையும் ரொம்ப க்யூட்டா இருக்கு திவ்யா..... மிக்க நன்றி.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

\\உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என‌
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட
வேண்டுமா என்ன..? \\



ஆஹா.......எப்படி இப்படியெல்லாம்??
சூப்பர்ப்:))) //

:)))) நன்றி... நன்றி...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

\\ஏங்க' என நீ
கூப்பிடும் போதே
ஏங்க ஆரம்பித்துவிடுகிறது
இந்த மனசு...
போய்த்தொலையட்டும்
அதையும் கொஞ்சம்
கொஞ்சிவிட்டுப்போயேன்... \\


'ஏங்க' ன்ற வார்த்தை வைச்சு மனசு 'ஏங்கு'வதை மிக மிக அழகா இந்த வரிகளில் எழுதியிருக்கிறீங்க.........அட்டகாசம்!!//

சில "ஏங்க" ஏங்கவைக்கும்தானே..?? ;)))

அட்டகாசமான ரசனைக்கு மிக்க நன்றி..:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...

வழக்கம்போல் குறும்புகள்
கறும்பாய் தித்திக்கிறது
உங்கள் கவிதையில்........வாழ்த்துக்கள்!!//

கறும்பான வருகைக்கும் தித்திப்பான தருகைக்கும் மிக்க நன்றி திவ்யா.. :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ஸ்ரீ said...

Adadadadadadaaaaaaaaaaaaaaaaa Kavinjare naan poi thoonganumla en ippadi?

Sokka iruku pa //

வாங்க ஸ்ரீ...:)))

தூங்குங்க கவிஞரே...:))) சோக்கான தருகைக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது...:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Saravana Kumar MSK said...

வெகுநாட்களாக பதிவு போடாததை மிக கடுமையாய் கண்டிக்கிறேன்..//

வாருங்கள் சரவணகுமார்..:))

அட என்னாங்க இதுக்கெல்லாம் கோச்சிகிட்டு...?? ;))))

அதான் பதிவு போட்டாச்சே இன்னமும் கண்டிங்கிறீங்களா என்ன..??;))))

மிக்க நன்றி... அன்பான அக்கரைக்கு...:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Saravana Kumar MSK said...

//கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்...//

தெய்வமே.. எங்கயோ போயிடீங்க.. கலக்கல்..//

:))) தெய்வம் நீங்கதாங்க கவிஞரே..:)))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

மருதாணி மனக்கிறது :)

gayathri சொன்னது…

annaithu kavithikalu arumai pa

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Saravana Kumar MSK said...

உங்களுக்கு மட்டுமே எப்படித்தான் இப்படியெல்லாம் தோணுதோ.. கலக்றீங்க... எல்லாமே சூப்பர்.. //

வாங்க சரவணா... என்ன கவிஞரே அழகழகான கவிதைகளை நீங்க எழுதிட்டு இப்படி கேட்கறீங்க...:))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Saravana Kumar MSK said...

//அய்யோ இது சமையல்
அறைங்க...
என சத்தம் போடுகிறாய்
அடிப்பாவி அதற்காக
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
அறையா வைக்கமுடியும்..??//

சான்ஸே இல்லை.. :) //

மிக்க நன்றி சரணகுமார்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Saravana Kumar MSK said...

உங்க கவிதைகளை படிக்கும் கொஞ்சம் வயித்தெரிச்சலாவும் பொறாமையாவும் இருக்கு.. //

:)))))))))))

என்னங்க சரவணகுமார்... சந்தோஷப்படுங்க ப்ளீஸ்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//வழிமொழிபவன் said...

//மருதாணி ' காதல்' வாசம் வீசுகிறது கவிதை முழுவதும்.........அற்புதமான கற்பனை வளம் உங்களுக்கு, பாராட்டுக்கள் கவிஞரே!!!
//

வழிமொழிகிறேன்!

ஹிஹி! //

வாங்க வழிமொழிபவரே...
உங்க பேரே இதானா..? ;))))

அழகான சிரிப்பிற்கும் வழிமொழிந்தமைக்கும் மிக்க நன்றி... !!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// புதியவன் said...

எந்தக் கவிதையை குறிப்பிட்டுச் சொல்வது என்று தெரியவில்லை எல்லாக் கவிதையையும் குறிப்பிடால் நகல் எடுத்த மாதிரி தெரியும்.
ஆனால், ஒன்று உங்கள் கவிதைகளைப் படிப்பவர் முகம் மருதாணியிட்ட கைகளைப் போல் சிவப்பது என்னவோ உறுதி...வழ்த்துக்கள் நவீன். //

வாருங்கள் புதியவன்.. :)))

ஆஹா படிப்பவர் முகம் சிவக்குமா..? :))) மிக்க நன்றி அழகான வருகைக்கும் குறும்பான தருகைக்கும்...:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Thamizhmaangani said...

அனைத்து கவிதைகளும் சூப்பர்!

//அய்யோ இது சமையல்
அறைங்க...
என சத்தம் போடுகிறாய்
அடிப்பாவி அதற்காக
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
அறையா வைக்கமுடியும்..??//

நவீனின் ultimate touch கவிதையில் மிளிர்கிறது. சூப்பர்! வாழ்த்துகள் //

வாருங்கள் தமிழ்மாங்கனி... :)))
மிகவும் அழகான ரசனைக்கும் அருமையான தருகைக்கும் மிக்க நன்றி தமிழ்...:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இறக்குவானை நிர்ஷன் said...

காதலின் சில்மிஷங்களையும் கொஞ்சல்களையும் மருதாணி கலந்து எழுதியிருக்கும் ஒவ்வொரு வரிகளும் பிரமாதம்.
வரிகளோடு இணைந்து கற்பனையையும் கூட்டுகின்றன.

நன்றாயிருக்கிறது நவீன். //

வாருங்கள் நிர்ஷன்.. :)))

அப்படியா நிர்ஷன்..?? :)))

வருகையும் தருகையும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது... தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி.. :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// நெல்லை காந்த் said...

//கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்...//
Kurummuukal thodakam, ennyenel nee enn kaee ahadakam. //

வாருங்கள் நெல்லை காந்த... :)))
வருகையும் தருகைக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// நெல்லை காந்த் said...

//இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??//
ahmaa ullalum sillirukuthu...//

ஆஹா சிலிர்க்குதா காந்த்..?? ரசனையாக ரசிப்பு... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// நெல்லை காந்த் said...

//

உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என‌
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட
வேண்டுமா என்ன..? //
Kaallakal kavigaaree //

கலக்கல் தங்களது அருமையான ரசிப்பும் தான்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நெல்லை காந்த் said...

//அய்யோ சும்மா
இருடா மருதாணி
கலைந்துவிடும்
எனப் புலம்புகிறாய்...
கவலைப்படாதே..
மருதாணியை எல்லாம்
கலைக்க மாட்டேன்
சரியாடி செல்லம்..?//
:) //

மிக்க நன்றி நெல்லைகாந்த... அருமையான வருகைக்கும் மிக அழகான தருகைக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஸ்ரீமதி said...

அச்சச்சோ அண்ணா ரொம்ப சூப்பரா இருக்கு.... :))) கைல மருதாணி வெச்சிருந்ததால தான் இவ்ளோ நாளா பதிவு போடலியா?? ;)) மருதாணி ரொம்ப சிவந்து போச்சு அண்ணா போதும்.. ;)) //

வாருங்கள் ஸ்ரீமதி...

நான் எதுக்கு ஸ்ரீ கைல மருதாணி வச்சுக்க போறேன்...? ;)))))
மருதாணி சிவந்து போச்சா..? ஆனாலும் ரொம்ப குறும்புதான் ஸ்ரீக்கு... ம்ம்ம்ம்.... கவனிச்சுக்கறேன்... ;))))

Senthil சொன்னது…

You can try sending ur kavithai to
vikatan,kumudam...!!

Ramesh சொன்னது…

எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்கிறாய்...
அப்படியெல்லாம்
இல்லை செல்லம்
அப்போ அப்போ
உன் நெனப்பும் வரும்
எனச்சொன்னால்
ஏண்டி என்னை
முறைக்கிறாய்..?

These lines are so super

Boss ungala 'yenga' nu kupita, alathu kupida pora antha lucky girl yarunu naanum konjam thrinjukalama.chumma solunga boss.
ungal,
Ramesh Kumar.S

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ஸ்ரீமதி said...

//கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்...//

:)) Cute.. :)) //

அப்படியா..? மிக்க நன்றி ஸ்ரீ... :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ஸ்ரீமதி said...

//இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??//

:)) //

:))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ஸ்ரீமதி said...

//இரண்டு கைகளிலும்
நான் வைத்திருக்கும்
மருதாணி அழகாக இருக்கிறதாடா
எனக் கேட்கிறாயே
செல்லக்குட்டி
இரண்டு கைகளுக்குள்ளும்
என்னை வைத்துக்கொண்டால்
இன்னும் அழகாக இருப்பாய்
தெரியுமா..?//

ம்ஹும்... :)) //

இதுக்கென்ன அர்த்தம் ஸ்ரீ..?? :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஸ்ரீமதி said...

எல்லா கவிதையுமே சூப்பர் அண்ணா :))))))) //

வருகைக்கும் தாராளமான தருகைக்கும் மிக்க நன்றி ஸ்ரீமதி.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இனியவள் புனிதா said...

இந்த கொஞ்சல்களுக்காக எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் காத்திருக்கலாம்... மருதாணியும் காதல் பேசுவது அழகுதான்.பாராட்டுகள்!! //

வாருங்கள் புனிதா... :)))

தவறாத வருகையும் அழகான தருகையும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//எழில்பாரதி said...

அருமையான கவிதைகள்!!!! //

வாங்க எழில்.. :))
கவிஞர் சொன்னால் மிக்க மகிழ்ச்சி!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சென்ஷி said...

கவிதையெல்லாமே கலக்கலாயிருக்குது நவீன்! //

வாருங்கள் சென்ஷி.. :))

மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது தங்களின் வருகையும் தருகையும்... மிக்க நன்றி !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// எழில்பாரதி said...

எல்லா கவிதைகளும் அருமை...
தனித் தனியா சொல்ல முடியாத அளவுக்கு!!!!

உங்க வலைப்பூ இன்று மருதாணியாய் மணக்கிறது!!! //

அப்படியா எழில்..??

மருதாணியோடு சேர்ந்து தங்கள் தருகையும் மணக்கிறது.. :))))மிக்க நன்றி..!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//reena said...

கைகள் சிவக்க வைக்கும் மருதாணி கொண்டு கன்னம் சிவக்கச்செய்து விட்டீர்கள் நவீன் தங்கள் கவிதைகளால்... அழகு ததும்பி வழிகிறது கவிதையிலும் காதலிலும்... வாழ்த்துக்கள் //


வாருங்கள் ரீனா... :)))

அட கைகள் சிவக்க வைத்ததைக் கொண்டு கன்னம் சிவக்க வைத்தேனா..? மிக அழகான விமர்சனம்.. :)))
ததும்பி வழியும் வாழ்த்துக்களால் என் உற்சாகத்தை ததும்பி வழியச்செய்துவிட்டீர்கள்..:))) மிக்க நன்றி.. !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சுபா said...

மருதாணி யின் வாசத்தை நுகர முடிகிறது கவிதைகளில்....
வாழ்த்துக்கள் கவிஞரே.......
தொடரட்டும் உமது கவிதை பயணம்... //

வாங்க சுபா.. :))

மருதாணிவாசனையோடு
சேர்ந்து உங்களின் வருகையின் வாசமும் மணக்கிறது... மிக்க நன்றி..!! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//sathish said...

மருதாணி மனக்கிறது :)///

வாருங்கள் கவிஞரே.... :))
எப்படி இருக்கிறீர்கள்..??? மிக்க நன்றி !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// gayathri said...

annaithu kavithikalu arumai pa//

வாருங்கள் காயத்ரி.. :))

அனைத்து கவிதைகளையும் ரசித்தமைக்கும் அதை அழகாக சொன்னமைக்கும் மிக்க நன்றி..:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Sen said...

You can try sending ur kavithai to
vikatan,kumudam...!! //

வாருங்கள் செந்தில்... :))
கண்டிப்பாக.. :)) மிக்க நன்றி.. வருகைக்கும் அழகான தருகைக்கும்...:)))

ஜியா சொன்னது…

Iayo.... thala.... sema kalakkal... padikkumpothe punnaigaiyo punnagai... eppadi ippadi ellaam??

பெயரில்லா சொன்னது…

தல எல்லாமே சூப்பரு.

படிச்சதும் ஒரு பரவசம் பரவுது ;)

கைப்புள்ள சொன்னது…

நவீன்...சான்ஸே இல்லை. மருதாணி வழியா காதல் கொப்பளிக்குது. செம கற்பனை ப்ளஸ் ரசனை ஐயா உங்களுக்கு.

அருமை.

கைப்புள்ள சொன்னது…

//உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என‌
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட
வேண்டுமா என்ன..?
//

கலக்கல்ஸ்
:)

கைப்புள்ள சொன்னது…

// ஸ்ரீமதி said...
அச்சச்சோ அண்ணா ரொம்ப சூப்பரா இருக்கு.... :))) /இவ்ளோ நாளா பதிவு போடலியா?? ;))
//

"கைல மருதாணி வெச்சி விட்டுக்கிட்டிருந்ததால தான் இவ்ளோ நாளா பதிவு போடலியா?? ;)) "னு இல்லை இருக்கணும்?
:)))

நாணல் சொன்னது…

யப்பா மருதாணி வெச்சு இப்படி எல்லாம் யோசிச்சிருகீங்க.... :)
எல்லாமே ரொம்ப அழ்கா இருந்தது....

காண்டீபன் சொன்னது…

//'ஏங்க' என நீ
கூப்பிடும் போதே
ஏங்க ஆரம்பித்துவிடுகிறது
இந்த மனசு...//

கவிதைகள் அசத்தல்.
அதற்கேப்ப படங்களும் சூப்பர்.

Unknown சொன்னது…

//நவீன் ப்ரகாஷ் said...
// ஸ்ரீமதி said...

//இரண்டு கைகளிலும்
நான் வைத்திருக்கும்
மருதாணி அழகாக இருக்கிறதாடா
எனக் கேட்கிறாயே
செல்லக்குட்டி
இரண்டு கைகளுக்குள்ளும்
என்னை வைத்துக்கொண்டால்
இன்னும் அழகாக இருப்பாய்
தெரியுமா..?//

ம்ஹும்... :)) //

இதுக்கென்ன அர்த்தம் ஸ்ரீ..?? :)))//

ம்ஹும் அப்படிங்கறது அப்படியா??-வோட Short form.. ;)) இப்ப புரிஞ்சதா?? :))

தமிழன்-கறுப்பி... சொன்னது…

ஆச்சரியம்தான் அண்ணே நானும் இந்த சக்கரைக்கட்டி படத்தின் மருதாணி பாட்டு கேட்டநாளில் இருந்து மருதாணி பற்றிய பரவசங்களில் ஊறிக்கொண்டிருந்தேன் அதற்குள் நீங்கள் முந்திக்கொண்டீர்கள்... :)

சமீபத்தில் மருதாணியை நினைவு படுத்தியது அந்த பாடல்தான்...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\
'ஏங்க' என நீ
கூப்பிடும் போதே
ஏங்க ஆரம்பித்துவிடுகிறது
இந்த மனசு...
\\

என்னவோ தெரியவில்லை அண்ணன் இது மட்டும் பெண்களாலேயே முடிகிறது ஏங்க என்கிற ஒரு வர்த்தையை எத்தனைவிதமாக மாற்றி விடுகிறார்கள்... ;)

இது எங்கள் ஊர் மொழியில் இன்னும் சுகமாக இருக்கும் :)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\
கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்...
\\

அது சரி...!
இல்லாதவன் பாடு திண்டாட்டம்யா வயித்தெரிச்சைல கிளப்பிகிட்டு...:)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\
இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??
\\

இல்லைன்னா விட்டிருவீங்களாக்கும்...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\
உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என‌
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட
வேண்டுமா என்ன..?
\\

அதானே...! :)

(வேற ஒண்ணும் தோணல அண்ணே)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\
அங்கேயெல்லாம்
தொடாதேடா ப்ளீஸ்...
எனக்குக் கூசும் என ஏண்டி
சொல்கிறாய்..?
இப்படி சொன்னால்
எப்படி சும்மா இருக்கும்
என் பிஞ்சுவிரல்கள்... ??
\\

முடியல கவிஞரே...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\
அய்யோ இது சமையல்
அறைங்க...
என சத்தம் போடுகிறாய்
அடிப்பாவி அதற்காக
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
அறையா வைக்கமுடியும்..??
\\

அது சரி!! அப்படிப்போடு...:)
வீக்கென்ட் வந்தாலே இந்த ரொமான்ஸ்ல திங்கட்கிழமை வேலைக்கு போறது நரகமாயிடுது ;)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\
உன்னைத் தொடக்கூடாது
எனத்தானடி சொன்னாய்...?
அப்புறம் இப்படி
காற்றை காதுமடல்களில்
ஊதி கிச்சு கிச்சு
மூட்டுகிறேன் என
எப்படிக்
குற்றப்படுத்தலாம் நீ..?
\\

குற்றம் சொல்லாமல் போனால் அங்கே திருப்தி இருப்பதிலலை...;)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\
எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்கிறாய்...
அப்படியெல்லாம்
இல்லை செல்லம்
அப்போ அப்போ
உன் நெனப்பும் வரும்
எனச்சொன்னால்
ஏண்டி என்னை
முறைக்கிறாய்..?
\\

ஒரு நாளைக்கு எத்தனை அடிகள்(செல்லமாய்த்தான்)விழும் உங்களுக்கு...? :)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\
இனி இரண்டு கைகளிலும்
மருதாணி வைத்துக்கொள்ளடி
உன் முந்தானையை
சரி செய்யத்தான் நான்
இருக்கிறேனே..
\\

அது ஒரு தனி சுகம்தான் இல்லையா...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\
இரண்டு கைகளிலும்
நான் வைத்திருக்கும்
மருதாணி அழகாக இருக்கிறதாடா
எனக் கேட்கிறாயே
செல்லக்குட்டி
இரண்டு கைகளுக்குள்ளும்
என்னை வைத்துக்கொண்டால்
இன்னும் அழகாக இருப்பாய்
தெரியுமா..?
\\

ச்சீ...போடா...
நான் மாட்டேன் உன்னைப்பற்றித்தான் எனக்கு தெரியுமே...;)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

சந்தோசத்தருணங்களை மனது மீட்டுப்பார்த்தாலும் விழியோரம்...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

பல நாட்களுக்கு பிறகு உங்கள் பக்கத்தில் பின்னுட்டங்களோடு வந்திருப்பதில் திருப்தி...

Princess சொன்னது…

அடடடடா!
ஒரு மருதாணிக் காவியம் இங்க அரங்கேற்றிட்டு இருக்கா...
எனக்கும் இப்ப மருதாணி வச்சுக்கணும் போல இருக்கு

சரி...இந்த கவிதை...உள்ளங்கையில் வைத்த மருதாணி
"இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??"


இது மெல்லிசாய் விரல்களில் வரைந்த மருதாணி
"உன்னைத் தொடக்கூடாது
எனத்தானடி சொன்னாய்...?
அப்புறம் இப்படி
காற்றை காதுமடல்களில்
ஊதி கிச்சு கிச்சு
மூட்டுகிறேன் என
எப்படிக்
குற்றப்படுத்தலாம் நீ..?"

இந்த கவிதை ஒவ்வொரு விரல்களிலும் கீரிடம் மாதிரி வைத்த மருதாணி
"இரண்டு கைகளிலும்
நான் வைத்திருக்கும்
மருதாணி அழகாக இருக்கிறதாடா
எனக் கேட்கிறாயே
செல்லக்குட்டி
இரண்டு கைகளுக்குள்ளும்
என்னை வைத்துக்கொண்டால்
இன்னும் அழகாக இருப்பாய்
தெரியுமா..?"


"எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்கிறாய்...
அப்படியெல்லாம்
இல்லை செல்லம்
அப்போ அப்போ
உன் நெனப்பும் வரும்
எனச்சொன்னால்
ஏண்டி என்னை
முறைக்கிறாய்..?"

எல்லாம் கவிதையும் சூப்பர்...படிக்கப் படிக்க மருதாணி வச்சுக்கணும் போல இருக்கே! என்ன பண்ண...ம்ம் அப்போ மீண்டும் ஒரு முறைப் படிக்கிறேன் :)

Ravishna சொன்னது…

I like your imagination Naveen Prakash.

--Ravishna

Princess சொன்னது…

அச்சச்சோ! என் பின்னுட்டம் காணமே :(((

எங்க போச்சு ? :(

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Ramesh said...

எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்கிறாய்...
அப்படியெல்லாம்
இல்லை செல்லம்
அப்போ அப்போ
உன் நெனப்பும் வரும்
எனச்சொன்னால்
ஏண்டி என்னை
முறைக்கிறாய்..?

These lines are so super

Boss ungala 'yenga' nu kupita, alathu kupida pora antha lucky girl yarunu naanum konjam thrinjukalama.chumma solunga boss.
ungal,
Ramesh Kumar.S //

வாங்க ரமேஷ்... :)))
மிக்க மகிழ்ச்சியளிக்கிறது வருகையும் தருகையும்... :))


"ஏங்க" னு கூப்பிடறது யாருன்னு தெரிஞ்சுக்கனுமா.>? :))) எனக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டேனா ரமேஷ்..?? ;-)))))

நசரேயன் சொன்னது…

அருமை எல்லாமே அருமை ..

மருதானியிலே இவ்வளவு சமாசாரம் இருக்கா?

Vijay சொன்னது…

நவீன் பிகாஷ்,
உங்கள் கவிதையை ரசிப்பதா, கவிதை பேசும் படங்களை ரசிப்பதா, குழம்பிப் போயிருக்கேன்.

எங்கேயிருந்து பிடிக்கிறீர்கள் இவ்வளவு அழகான புகைப்படங்களை.

logu.. சொன்னது…

உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என‌
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட
வேண்டுமா என்ன..?


hayyo..
enna oru azhana varikal..
kathalukku konja mattumaala..
minjavum therikirathe..
lovely lines..
romba rasithen ungal varikalai..

சுபானு சொன்னது…

அழகான கவிதைகள் ...

மஹாராஜா சொன்னது…

//Blogger Saravana Kumar MSK said...

வெகுநாட்களாக பதிவு போடாததை மிக கடுமையாய் கண்டிக்கிறேன்..//

அதை நான் வழிமொழிகிறேன்..

மஹாராஜா சொன்னது…

//உங்க கவிதைகளை படிக்கும் கொஞ்சம் வயித்தெரிச்சலாவும் பொறாமையாவும் இருக்கு..//

ரிப்பீட்டே ........ எனக்கும் அதே தான்.

மஹாராஜா சொன்னது…

//இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??////


Amazing... Excellent... Super pa..

மஹாராஜா சொன்னது…

இதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக அவர்கள் முகம் சிவக்கும்,...
அது நிச்சயம்

மஹாராஜா சொன்னது…

உங்கள் கவிதையில் அதிகம் சில்மிஷங்களும் , வெட்கங்களும் ரொம்பவும் அதிகமாகவே இருக்கிறது... அது தான் எனக்கு புடித்து இருக்கிறது... சாரி ... உங்க கவிதையை படிக்கும் போது என்னை அறியாமலே கற்பனை உலகத்துக்கு சென்று விடுகிறேன். என்னையும் அறியாமல்..

வாழ்த்துக்கள்.. கவிஜரே...
தொடரட்டும் உங்கள் கவிதை ஜாலம்.

அத்திரி சொன்னது…

//கல்யாணம் ஆனபின்பு நான்
சேலை மட்டும் தான்
கட்டிக்கொள்ள வேண்டுமா
என் ஏண்டி கேட்கிறாய்...
தேவையில்லை...
என்னையும்
கட்டிக்கொள்ளலாம்..//

எங்கியோ போய்ட்டீங்ங்ங்ங்ங்ங்ங்க...........

gayathri சொன்னது…

ennga sir neenga pathivu pottu 1 month 7 dys akuthu .

enna kaila vacha maruthani innuma sevakkama iruku .

Divya சொன்னது…

oru pathivirkum aduththa pathivirkum neenda idaiveli vida koodathu sir..........seekiram aduththa kavithai release panunga :)))

பட்டிக்காட்டான் சொன்னது…

மருதாணி வைக்காமலே செவந்திடும் போல... ரொம்ப நல்லா இருக்கு!

பெயரில்லா சொன்னது…

வணக்கம் நவீன்.

வெட்கங்களை
மருதாணி வாசங்களுடன்
வெட்கப்படவைத்த ‍______ நவீனுக்கு பாராட்டு......

வெட்கங்ளூடன்
பாஸ்கரன்.....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஜி said...

Iayo.... thala.... sema kalakkal... padikkumpothe punnaigaiyo punnagai... eppadi ippadi ellaam??//

வாங்க ஜி.. :))
நீங்க என்றென்றும் புன்னகை பூத்துக்கொண்டே இருக்கனும்னு தான் இப்படியெல்லாம்... :))) மிக்க நன்றி... !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ப்ரியன் said...

தல எல்லாமே சூப்பரு.

படிச்சதும் ஒரு பரவசம் பரவுது ;)//

வாங்க வாங்க கவிஞரே.. :)))

உங்க வருகையே எனக்கு பரவசமா இருக்குங்க... வருகையும் தருகையும் அருமை... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// கைப்புள்ள said...

நவீன்...சான்ஸே இல்லை. மருதாணி வழியா காதல் கொப்பளிக்குது. செம கற்பனை ப்ளஸ் ரசனை ஐயா உங்களுக்கு.

அருமை.//

வாங்க தல.... :)))
எப்படி இருக்கீங்க..? நீண்ட இடைவெளிக்குபின் என்பக்கம் வந்து இருக்கீங்க.. மிக்க மகிழ்ச்சி... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// கைப்புள்ள said...

//உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என‌
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட
வேண்டுமா என்ன..?
//

கலக்கல்ஸ்
:) //

தல நீங்க சொன்னா அது நிஜமாவே கலக்கலாத்தான் இருக்கும்.. நன்றி நன்றி... ;)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// கைப்புள்ள said...

// ஸ்ரீமதி said...
அச்சச்சோ அண்ணா ரொம்ப சூப்பரா இருக்கு.... :))) /இவ்ளோ நாளா பதிவு போடலியா?? ;))
//

"கைல மருதாணி வெச்சி விட்டுக்கிட்டிருந்ததால தான் இவ்ளோ நாளா பதிவு போடலியா?? ;)) "னு இல்லை இருக்கணும்?
:))) //

வாங்க தல...

ஆஹா ஏதோ அந்த பொண்ணூதான் ஏதோ கேட்குதுன்னா நீங்க வேற இப்படி கேள்விய திருத்தி கேட்கச் சொல்றீங்களா....?? ஆனாலும் உங்க குறும்பு இருக்கே.... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// நாணல் said...

யப்பா மருதாணி வெச்சு இப்படி எல்லாம் யோசிச்சிருகீங்க.... :)
எல்லாமே ரொம்ப அழ்கா இருந்தது....//

வாங்க நாணல்.. :)))

எல்லாம் உங்களை மாதிரி ரசனைக்காரர்கள் கொடுக்கும் உற்சாகம் தான் இப்படி யோசிக்கவைக்குதுங்க... :))))
மிக்க நன்றி... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//காண்டீபன் said...

//'ஏங்க' என நீ
கூப்பிடும் போதே
ஏங்க ஆரம்பித்துவிடுகிறது
இந்த மனசு...//

கவிதைகள் அசத்தல்.
அதற்கேப்ப படங்களும் சூப்பர்.//

வாங்க காண்டீபன்.. :)))
மிக அழகான தருகைக்கும் அசத்தலான வருகைக்கும் மிக்க நன்றி..:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஸ்ரீமதி said...

//நவீன் ப்ரகாஷ் said...
// ஸ்ரீமதி said...

//இரண்டு கைகளிலும்
நான் வைத்திருக்கும்
மருதாணி அழகாக இருக்கிறதாடா
எனக் கேட்கிறாயே
செல்லக்குட்டி
இரண்டு கைகளுக்குள்ளும்
என்னை வைத்துக்கொண்டால்
இன்னும் அழகாக இருப்பாய்
தெரியுமா..?//

ம்ஹும்... :)) //

இதுக்கென்ன அர்த்தம் ஸ்ரீ..?? :)))//

ம்ஹும் அப்படிங்கறது அப்படியா??-வோட Short form.. ;)) இப்ப புரிஞ்சதா?? :))//

அட அப்படியா ஸ்ரீமதி...??? :))) நல்லவேளை நான் ஏதோ புடிக்கலையோனுல்ல நினைச்சேன்.. :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்-கறுப்பி... said...

ஆச்சரியம்தான் அண்ணே நானும் இந்த சக்கரைக்கட்டி படத்தின் மருதாணி பாட்டு கேட்டநாளில் இருந்து மருதாணி பற்றிய பரவசங்களில் ஊறிக்கொண்டிருந்தேன் அதற்குள் நீங்கள் முந்திக்கொண்டீர்கள்... :)

சமீபத்தில் மருதாணியை நினைவு படுத்தியது அந்த பாடல்தான்... //

வாங்க தமிழன்... :)))

அடடடா... இப்படி ஆய்டுச்சே... நீங்களும் மருதாணிய வச்சு ( வச்சுகிட்டு இல்ல ;-) ) எழுதுங்களேன் தமிழன்... ரொம்ப அழகா இருக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்-கறுப்பி... said...

\\
'ஏங்க' என நீ
கூப்பிடும் போதே
ஏங்க ஆரம்பித்துவிடுகிறது
இந்த மனசு...
\\

என்னவோ தெரியவில்லை அண்ணன் இது மட்டும் பெண்களாலேயே முடிகிறது ஏங்க என்கிற ஒரு வர்த்தையை எத்தனைவிதமாக மாற்றி விடுகிறார்கள்... ;)

இது எங்கள் ஊர் மொழியில் இன்னும் சுகமாக இருக்கும் :) //

நீங்க சொன்ன மிகச்சரியாகத்தான் இருக்கும் தமிழன்.. ;)))))

உங்கள் ஊர் மொழியில் கொஞ்சம் மொழியுங்களேன்... படித்துப்பார்க்கிறேன்.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்-கறுப்பி... said...

\\
கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்...
\\

அது சரி...!
இல்லாதவன் பாடு திண்டாட்டம்யா வயித்தெரிச்சைல கிளப்பிகிட்டு...:) //

வயித்தெரிச்சலா..?? யாருக்கு..?? :))) அதைக்கூட இப்படி அழகா சிரிச்சுகிட்டே சொல்லறீங்களே... அழகா இருக்கும் உங்க மனசுபோல... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்-கறுப்பி... said...

\\
இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??
\\

இல்லைன்னா விட்டிருவீங்களாக்கும்... //

:)))) இப்படியெல்லாம் கேட்டா என்ன சொல்லறது தமிழ்..?? :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்-கறுப்பி... said...

\\
உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என‌
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட
வேண்டுமா என்ன..?
\\

அதானே...! :)

(வேற ஒண்ணும் தோணல அண்ணே) //

அட என்னைப் போலவே உங்களுக்கும் தோணிருச்சா..?? ;)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்-கறுப்பி... said...

\\
அங்கேயெல்லாம்
தொடாதேடா ப்ளீஸ்...
எனக்குக் கூசும் என ஏண்டி
சொல்கிறாய்..?
இப்படி சொன்னால்
எப்படி சும்மா இருக்கும்
என் பிஞ்சுவிரல்கள்... ??
\\

முடியல கவிஞரே... //

:))))) என்ன தமிழன் இப்படி சொல்லிட்டா எப்படி..? கொஞ்சம் முயற்சி பண்ணிதான் பாருங்களேன்... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்-கறுப்பி... said...

\\
அய்யோ இது சமையல்
அறைங்க...
என சத்தம் போடுகிறாய்
அடிப்பாவி அதற்காக
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
அறையா வைக்கமுடியும்..??
\\

அது சரி!! அப்படிப்போடு...:)
வீக்கென்ட் வந்தாலே இந்த ரொமான்ஸ்ல திங்கட்கிழமை வேலைக்கு போறது நரகமாயிடுது ;)//

அதுதான் சரி... :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்-கறுப்பி... said...

\\
உன்னைத் தொடக்கூடாது
எனத்தானடி சொன்னாய்...?
அப்புறம் இப்படி
காற்றை காதுமடல்களில்
ஊதி கிச்சு கிச்சு
மூட்டுகிறேன் என
எப்படிக்
குற்றப்படுத்தலாம் நீ..?
\\

குற்றம் சொல்லாமல் போனால் அங்கே திருப்தி இருப்பதிலலை...;) //

அட அப்படி கூட இருக்குமா..?? :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்-கறுப்பி... said...

\\
எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்கிறாய்...
அப்படியெல்லாம்
இல்லை செல்லம்
அப்போ அப்போ
உன் நெனப்பும் வரும்
எனச்சொன்னால்
ஏண்டி என்னை
முறைக்கிறாய்..?
\\

ஒரு நாளைக்கு எத்தனை அடிகள்(செல்லமாய்த்தான்)விழும் உங்களுக்கு...? :) //

அஹா... அதுசரி.... ஏங்க தமிழன் நானே ஏதோ கற்பனையிலே குதிரை ஓட்டிகிட்டு இருக்கேன்... இப்படி கேள்வி கேட்டு கீழதள்ளிவிட்டா எப்படீங்க...?? ;)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்-கறுப்பி... said...

\\
இனி இரண்டு கைகளிலும்
மருதாணி வைத்துக்கொள்ளடி
உன் முந்தானையை
சரி செய்யத்தான் நான்
இருக்கிறேனே..
\\

அது ஒரு தனி சுகம்தான் இல்லையா... //

தெரியலைங்களே... இப்போதைக்கு சுகமான கற்பனைனு தான் என்னால சொல்ல முடியும்.. :)))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்-கறுப்பி... said...

\\
இரண்டு கைகளிலும்
நான் வைத்திருக்கும்
மருதாணி அழகாக இருக்கிறதாடா
எனக் கேட்கிறாயே
செல்லக்குட்டி
இரண்டு கைகளுக்குள்ளும்
என்னை வைத்துக்கொண்டால்
இன்னும் அழகாக இருப்பாய்
தெரியுமா..?
\\

ச்சீ...போடா...
நான் மாட்டேன் உன்னைப்பற்றித்தான் எனக்கு தெரியுமே...;) //

ஆஹா ஆஹா ... அழகோ அழகு... !!!!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்-கறுப்பி... said...

சந்தோசத்தருணங்களை மனது மீட்டுப்பார்த்தாலும் விழியோரம்...//

என்ன தமிழன் இப்படி முடித்தால் எப்படி..? :((( கவலைகளை கவலைகொள்ள செய்யுங்கள்... :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்-கறுப்பி... said...

பல நாட்களுக்கு பிறகு உங்கள் பக்கத்தில் பின்னுட்டங்களோடு வந்திருப்பதில் திருப்தி... //

மிக விரிவான... அழகான... குறும்பான பின்னூட்டங்களால் என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள் தமிழன்... மிக்க நன்றி...:))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஸாவரியா said...

அடடடடா!
ஒரு மருதாணிக் காவியம் இங்க அரங்கேற்றிட்டு இருக்கா...
எனக்கும் இப்ப மருதாணி வச்சுக்கணும் போல இருக்கு //

வாருங்கள் ஸாவரியா... :)))

காவியம் எல்லாம் ரொம்ப பெரிய வார்த்தைங்க... ஏதோ என்னுடைய சாதாரண கற்பனை வரிகள் தான்... :)))

// சரி...இந்த கவிதை...உள்ளங்கையில் வைத்த மருதாணி
"இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??" //

அட உள்ளங்கையில் வைத்த மருதாணியா..? ஓஓஓஒ அப்படி அழகா சிவக்குமா..? ;))))


// இது மெல்லிசாய் விரல்களில் வரைந்த மருதாணி
"உன்னைத் தொடக்கூடாது
எனத்தானடி சொன்னாய்...?
அப்புறம் இப்படி
காற்றை காதுமடல்களில்
ஊதி கிச்சு கிச்சு
மூட்டுகிறேன் என
எப்படிக்
குற்றப்படுத்தலாம் நீ..?" //

:)))) அட அட என்ன அழகா வகைப்படுத்தறீங்க ஸாவரியா..!!!

// இந்த கவிதை ஒவ்வொரு விரல்களிலும் கீரிடம் மாதிரி வைத்த மருதாணி
"இரண்டு கைகளிலும்
நான் வைத்திருக்கும்
மருதாணி அழகாக இருக்கிறதாடா
எனக் கேட்கிறாயே
செல்லக்குட்டி
இரண்டு கைகளுக்குள்ளும்
என்னை வைத்துக்கொண்டால்
இன்னும் அழகாக இருப்பாய்
தெரியுமா..?" //


"எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்கிறாய்...
அப்படியெல்லாம்
இல்லை செல்லம்
அப்போ அப்போ
உன் நெனப்பும் வரும்
எனச்சொன்னால்
ஏண்டி என்னை
முறைக்கிறாய்..?"

எல்லாம் கவிதையும் சூப்பர்...படிக்கப் படிக்க மருதாணி வச்சுக்கணும் போல இருக்கே! என்ன பண்ண...ம்ம் அப்போ மீண்டும் ஒரு முறைப் படிக்கிறேன் :)

என்னுடைய கவிதைகளை இப்படியெல்லாம் வகைப்படுத்த முடியுமான்னு உங்க விமர்சனம் பார்த்துதான் கத்துகிட்டேன் ஸாவரியா.... நீங்கள் ஒரு விமர்சன டீச்சர் போங்க.... :)))
மீண்டும் மீண்டும் படியுங்கள்... !!

மிக்க நன்றி அழகான வருகைக்கும்...மிக அழகான விமர்சனங்களுக்கும்... !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Ravishna said...

I like your imagination Naveen Prakash.

--Ravishna //

வாங்க ரவிஷனா.. :)))
மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ஸாவரியா said...

அச்சச்சோ! என் பின்னுட்டம் காணமே :(((

எங்க போச்சு ? :( //

அட அப்படியெல்லாம் தொலைஞ்சுடாது... இங்கதான் சுத்திகிட்டு இருக்கு பாருங்க ... ;))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நசரேயன் said...

அருமை எல்லாமே அருமை ..

மருதானியிலே இவ்வளவு சமாசாரம் இருக்கா? //

வாருங்கள் நசரேயன்... :)))

அட இதெல்லாம் கொஞ்சம் கம்மிதாங்க... :))))) மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும்...:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// விஜய் said...

நவீன் பிகாஷ்,
உங்கள் கவிதையை ரசிப்பதா, கவிதை பேசும் படங்களை ரசிப்பதா, குழம்பிப் போயிருக்கேன்.

எங்கேயிருந்து பிடிக்கிறீர்கள் இவ்வளவு அழகான புகைப்படங்களை. //

வாருங்கள் விஜய்... :)))

இரண்டையுமே ரசியுங்கள் விஜய்... :))) எல்லா படங்களையும் வலையில்தான் வளைத்துப்பிடிக்கிறேன்.. !! :))))

மிக்க நன்றி விஜய்.. !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// loga.. said...

உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என‌
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட
வேண்டுமா என்ன..?


hayyo..
enna oru azhana varikal..
kathalukku konja mattumaala..
minjavum therikirathe..
lovely lines..
romba rasithen ungal varikalai.. //

வாருங்கள் லோகா... :)))
கொஞ்சலும் மிஞ்சலும் காதலுக்கே அழகுதான் அல்லவா லோகா..? மிக்க நன்றி... மிக அழகான ரசனைக்கும் ... துள்ளலான தருகைக்கும்... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// சுபானு said...

அழகான கவிதைகள் ...//

வாருங்கள் சுபானு.. :)))

மிக்க நன்றி... அழகான் வருகைக்கும் தருகைக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மஹாராஜா said...

//Blogger Saravana Kumar MSK said...

வெகுநாட்களாக பதிவு போடாததை மிக கடுமையாய் கண்டிக்கிறேன்..//

அதை நான் வழிமொழிகிறேன்.. //

வாருங்கள் மஹாராஜா எப்படி இருக்கிறீர்கள்..?? :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மஹாராஜா said...

//உங்க கவிதைகளை படிக்கும் கொஞ்சம் வயித்தெரிச்சலாவும் பொறாமையாவும் இருக்கு..//

ரிப்பீட்டே ........ எனக்கும் அதே தான். //

ஆஹா இப்படி கூட்டணியோடதான் இருக்கீங்களா..?? :))) ஏங்க இப்படி... நானும் உங்க கோஷ்டிதான்... ;)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மஹாராஜா said...

//இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??////


Amazing... Excellent... Super pa.. //

நன்றி நன்றி நன்றி... :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// மஹாராஜா said...

இதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக அவர்கள் முகம் சிவக்கும்,...
அது நிச்சயம் //

மிக்க நன்றி மஹாராஜா... இதைவிட வேறென்ன வேண்டும் ஒரு கவிஞனுக்கு..? !! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மஹாராஜா said...

உங்கள் கவிதையில் அதிகம் சில்மிஷங்களும் , வெட்கங்களும் ரொம்பவும் அதிகமாகவே இருக்கிறது... அது தான் எனக்கு புடித்து இருக்கிறது... சாரி ... உங்க கவிதையை படிக்கும் போது என்னை அறியாமலே கற்பனை உலகத்துக்கு சென்று விடுகிறேன். என்னையும் அறியாமல்..

வாழ்த்துக்கள்.. கவிஜரே...
தொடரட்டும் உங்கள் கவிதை ஜாலம். //

ரொம்பவே அதிகமாக இருக்கின்றதா..?? :)))) கற்பனைகள் ஓரளவிற்கு சுகமானதுதானே மஹாராஜா..?? :))) மிக்க நன்றி ராஜா... மிக அழகான வருகைக்கும் மிக மிக அழகான தருகைக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//அத்திரி said...

//கல்யாணம் ஆனபின்பு நான்
சேலை மட்டும் தான்
கட்டிக்கொள்ள வேண்டுமா
என் ஏண்டி கேட்கிறாய்...
தேவையில்லை...
என்னையும்
கட்டிக்கொள்ளலாம்..//

எங்கியோ போய்ட்டீங்ங்ங்ங்ங்ங்ங்க........... //

வாருங்கள் அத்திரி...:)))
எங்கயோ இல்லீங்க.... இங்கதானே இருக்கேன்...;))))))
மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும்... !! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// gayathri said...

ennga sir neenga pathivu pottu 1 month 7 dys akuthu .

enna kaila vacha maruthani innuma sevakkama iruku .//

வாங்க காயத்ரி...:))

கொஞ்ச வேலைப்பளு அதிகமானதாலதாங்க... இதோ அடுத்த பதிவு போட்டுடேன் பாடிச்சுபாருங்க ப்ளீஸ்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...

oru pathivirkum aduththa pathivirkum neenda idaiveli vida koodathu sir..........seekiram aduththa kavithai release panunga :))) //

வாங்க திவ்யா... :))
ஏதோ பெரியவங்க நீங்க சொன்ன கேட்டுக்கறோம்...:)))) பதிவு போட்டாச்சுங்க... போதுமா...?? :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// பட்டிக்காட்டான் said...

மருதாணி வைக்காமலே செவந்திடும் போல... ரொம்ப நல்லா இருக்கு!//

வாங்க பட்டிக்காட்டான்... :))
மிக்க நன்றி வருகைக்கும் செவப்பான தருகைக்கும்... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Anonymous said...

வணக்கம் நவீன்.

வெட்கங்களை
மருதாணி வாசங்களுடன்
வெட்கப்படவைத்த ‍______ நவீனுக்கு பாராட்டு......

வெட்கங்ளூடன்
பாஸ்கரன்..... //

வாங்க பாஸ்கரன் வாங்க... :)))

அடடடா... இவ்வளவு வெட்கப்பட்டுடீங்களே... !!! :))))
மிகுந்த மகிழ்ச்சி தங்கள் வருகையும் வெட்கங்களூடேயான தருகையும்... :)))

பெயரில்லா சொன்னது…

எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்கிறாய்...
அப்படியெல்லாம்
இல்லை செல்லம்
அப்போ அப்போ
உன் நெனப்பும் வரும்
எனச்சொன்னால்
ஏண்டி என்னை
முறைக்கிறாய்..?

unmaya sonna muraika arambikaranga ba ippelam!!!!!!!

Unknown சொன்னது…

எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்கிறாய்...
அப்படியெல்லாம்
இல்லை செல்லம்
அப்போ அப்போ
உன் நெனப்பும் வரும்
எனச்சொன்னால்
ஏண்டி என்னை
முறைக்கிறாய்..?

appo appo avanga ninaipum vara koodathunu muraikirangalo ennavo???

marimuthu c s சொன்னது…

ayyo sir kavithai chanceah ila inaiku epti thunga poranu thrilaaaaaaaaaaa