வெள்ளி, பிப்ரவரி 29, 2008

கொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....


நானெல்லாம் தொலையவே
மாட்டேன் காதலில்
என இறுமாந்திருந்தபோதுதான்
நீ வந்து தொலைத்தாய்



பேசாமலே படுத்துகின்றன

உன் இதழ்கள்
பேசியே கொல்கின்றன
உன் விழிகள்
என்ன செய்ய நான்..?




இவ்வளவு சத்தமாக
யுத்தம் செய்யும்
என நினைக்கவே
இல்லை
உன் மெளனம்..



இதென்ன சின்னபையன் மாதிரி
இப்படி காதலிச்சிக்கிட்டு
என நீ கேட்காதே இனி
அப்புறம் பெரிய பையன்
மாதிரி காதலிக்க
ஆரம்பிப்பேன்
பரவாயில்லையா..?



உன்னை சமாதனப்படுத்தும்
இன்பத்திற்காகவாவது
உன்னுடன் எத்தனை முறை
வேண்டுமானாலும் சண்டை
போடலாமடி செல்லக்குட்டி...


என்மீது கோபம் வரும்போதெல்லாம்
என்னை அறைய வேண்டும் போல்
இருக்கிறதென சொல்கிறாய்
தாராளமாக என்னை அறைந்துகொள்
உன் உதடுகளால் மட்டும்...


கொஞ்சம் நானும்
கொஞ்சம் நீயும்
நம்மை நிறைய
கொஞ்சலாமா..?


ஏன் இப்படி கத்தறே
எனக் கேட்கிறாய்.!
உன்னைக் கொஞ்சும்
இன்பத்திற்காகவே
வித விதமாக உன்னைச்
சீண்டுகிறேன் தெரியுமா..?



இப்படியெல்லாம்
என்னிடம் கேட்டால்
எனக்கு கோபம் வரும்
என செல்கிறாய்
வரட்டுமே !!
அப்பொழுதுதானே
உன்னை சமாதானப்படுத்தும்
சாக்கில்
கன்னா பின்னாவென்று
ஏதேனும் செய்யலாம்..?





நினைக்கவே இல்லை
இவ்வளவு ஆவேசமாக
சண்டை போட்ட நாமா
இப்பொழுதும் அதே
வேகத்தோடு
ஆனால் காதலோடு
செல்லமாக..?


என் கவலைகளை
எல்லாம் உறிஞ்சி
எடுக்கும் மந்திரத்தை
எங்கேயடி கற்றுக்கொண்டன
உன் இதழ்கள்..?


கொஞ்சம் கண்ணாமூச்சி
ஆடலாமா ??
என் உதடுகள் உன்னில் எங்கே
ஒளிந்திருக்கிறதென நீ
கண்ணை மூடிக்கொண்டு
கண்டுபிடிப்பாயாம்...
அப்புறம் நானும்...
சரியாடி ..?



எவ்வளவு உயரம் நீ
எனக்கேட்டால்
சொல்ல மாட்டாயா
இரு இரு என்
உதடுகளை விட்டு
உன்னை அளக்க
வைக்கிறேன்
என செய்வாய் நீ..?


ஒவ்வொரு முறையும்
இனி என்னவோ
சந்திக்கவே போவதில்லை
என்பதைப்போல்தான்
நடந்து கொள்கின்றன
நம் இதழ்கள் ...




சாதாரணமாகவே
நீ கொஞ்சம்
அழகுதான்
இருந்தாலும்
நீ வெட்கப்படும்போது
பேரழகாகதெரிகிறாயாம்
சொல்லி சொல்லி
இறுமாந்து போகின்றன
இந்தக் கண்கள்





என்னவோ
வேண்டாம் என்றுதான்
ஆரம்பிக்கிறது
முடிக்கும் போது
முடிக்கவே வேண்டாம்
என்றுதான் முடிகிறது
இந்த முத்தங்களே
இப்படித்தான்...




சரியான திருடண்டா
நீ என்கிறாய்
என்ன செய்வது
இவ்வளவு அழகான
வெட்கங்களை நீ
வைத்துக்கொண்டிருந்தால்
அதைத் திருடாமல்

என்ன செய்வதாம்..?

எவ்வளவு
நல்ல பையனாக
இருந்தேன் ?
ஏண்டி என்னை
இப்படிச் சீண்டிவிட்டு
உன்னைக் கன்னாபின்னாவென
திருட வைக்கிறாய்..?



இப்படி அழகாக உதடு
சுழித்து என்னைச்
சீண்டிவிட்டு
அப்புறம்
நீ ரொம்ப மோசம் என
என்னைச் சொல்வதில்
அர்த்தம் இல்லை போடி...

ஹைய்யோ விடுடா
இப்போதான் கட்டினேன்
இந்த சேலையை என
நீ சிணுங்குகிறாய்
நானும் உன்னை
இப்போதுதான் கட்டினேன்
எப்படி விடுவது
அவ்வளவு சீக்கிரம்..?



தலைகோதிவிடும்போது
தாயாக
முத்தமிடும்போது
காதலியாக
என்மடியில் தலைவைக்கும்போது
குழந்தையாக
இப்படி பல அவதாரங்களை
எடுக்கிறாயடி நீ...


சீக்கிரம் என்னைக்
கட்டிக்கொள்
நீண்ட நாள் நான் எப்படி
வாழ்வது
என் இதயம் இல்லாமல்....