திங்கள், டிசம்பர் 29, 2008

தடம் எண் 143ல் கொஞ்சல் Express...


இரயிலில் செல்லும் போது
என்னை உன்னால் எதுவுமே
செய்ய முடியாதே என என்னிடம்
பழிப்பு காட்டுகின்றாயாடி...??
இப்படியெல்லாம் தேவை
இல்லாமல் என்னை
சீண்டிவிட்டு....
அப்புறம் என்னைக்
குற்றப்படுத்தாதே...


நீ என்னவோ
நல்ல பிள்ளைபோல்
கைகட்டி என் அருகில்
அமர்ந்து இருக்கிறாய்..
ஆனால் யாருக்குமே தெரியாமல்
உன் விரல்கள் போடும்
கும்மாளம் யாருக்கடா
தெரியும்
என்னைத்தவிர..??!!


உங்களுக்கு எல்லாம்
கோலம் போடவே வராது
என எத்தனை முறை
கேலிசெய்திருக்கிறாய்...
ம்ம்ம்... கொஞ்சம்
பக்கம் வந்து உட்காரேன் செல்லம்...
என் விரல்கள் போடும்
கோலம் காட்டுகிறேனடி...


இரவினில் நன்றாக தூங்கியபடியே
பயணம் செய்யலாம் என்று
சொல்லி என்னை ரயிலில் அழைத்து
வந்து இப்படியெல்லாம் காதுக்குள்
பேசினால் எப்படிடா என்னால்
தனியாகத் தூங்கமுடியும்...?!!


எல்லாருக்கும்
முன்பாக உன்னை
ரகசியமாய் சீண்டிவிட்டு
உன் முகம் படும்
பாடுகளை பார்க்க
பார்க்க எவ்வளவு
அழகாக இருக்கிறது
தெரியுமாடி..?


பார்ப்பவர்கள் எல்லாம்
நீ ஏதோ என்னிடம்
ரகசியம் பேசுவதாக
நினைத்துக்கொள்கிறார்கள்..
திருட்டுப்பயல் உன்னைப்
பற்றி எனக்குத் தெரியதா..?
ச்ச்சீய்ய்... போடா....


இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே
இன்னும் என்னவெல்லாம்
கொள்ளையடிக்கப்
போகிறாயோ எனக் கேட்கிறாய்...
உன்னிடம் கொள்ளையடிக்க
என்னடி இருக்கிறது உன்
அழகான வெட்கங்களைத்தவிர....?


இனி இரயில் பயணங்களில்
எல்லாம் என் அருகில்
அமராதே... மற்றவர்கள்
முன்பு நான் உன் குறும்பு
விரல்களால் நெளியாமல்
இருக்க படும் பாடு
உனக்கென்னடா தெரியும்...


கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க முடியவில்லையா
என பொய்யான
கோபத்தோடு கேட்கிறாய்..
உன்னை வைத்துக்கொண்டுதான்
சும்மா இருக்க
முடியவில்லை போடி...


இரயில் எல்லாம் இனி
உன்னுடன் பயணம்
செய்யவே மாட்டேன்
ரயில் பெட்டிகளைவிட
உன்னுடைய ஆட்டம்
அதிகமாக இருக்கிறது போடா...


முகம்முழுதும்
வெட்கங்களை பூசிக்கொண்டு
இதழ் முழுதும்
சிணுங்கல்கள் வழிய
யாரும் அறியாமல்
ரயிலில் நீ
என் காதுக்குள் சொல்லும்
வார்த்தைக்கள்
படுத்தும் பாடுகள்
உனக்குத் தெரியுமாடி
கன்னுகுட்டி...?

பின்குறிப்பு :‍‍‍‍

தோழி காயத்ரியின் கவிதைக் கருவிற்காக நான் முயற்சி செய்தது...

காயத்ரியின் இரயில் பயணத்தில் ஒரு காதல் கவிதை!

இதே கவிதைக்கருவிற்கு கவிஞர் ஸ்ரீ எழுதிய ர‌(ம)யில் காதலன்