சனி, அக்டோபர் 29, 2005

பிப்பெட்


திருட்டு பய ! சொரிப்பய சுத்த அல்பம்! மடயன் ! என் ரூம்மேட் மாறன் யாரையோ திட்டிக்கொண்டே ரூமுக்குள் வந்தான்.

“ ஏண்டா மாறா ? “ என நான் கேட்ட கேள்வியை கேட்ட மாதிரி தெரியவில்லை.

“ பண்ணாரிப்பய ! ஏன் தான் இப்படி இருகிறானுங்களோ? கழியன்களே இப்படி தாண்டா ! “

எனக்கோ ஆர்வம் அதிகமாகியது.மாறன் தொடர்ந்தான்.

“ நான் ஒருத்தன் நின்னுகிட்டு இருக்கேன்.அதுக்குள்ள முந்திகிட்டாங்கட! ஏமாந்தா தலையில உக்கார்து மொளகா அரச்சுடுவானுங்கடா ! “

எனக்கோ எரிச்சலாக இருந்தது.விசயத்தை கூறாமல் அவன் பாட்டுக்கு உளறிக்கொண்டிருந்தான்.

“ அதனை பேர் பார்கிறாங்களேன்னு ஒரு வெவஸ்தை இல்ல? அந்த பரதேசி பயலுக்கு? தத்திப்பய .ஒரு செகெண்ட் கவனிக்காம இருந்துட்டேன்.அந்த பய முந்திகிட்டான்.எனக்கு அப்படியே உடம்பெல்லாம் ஆசிட் கொட்னமாதிரி ஆயிடுச்சுடா ! என்ன பண்றது ? அப்படியே பல்லை கடிசிட்டு இருந்துட்டேன்.”

மாறன் பல் கடிக்கும் சத்தம் Dடிஎச் எபட்டில் என்னக்கு கேட்டது. என் பொருமை எல்லை கடந்தது.

“ மாறா ஒழுங்கா என்ன நடந்ததுன்னு சொல்லிட்டு பொலம்பு “ என்றேன் கோபமாக.

“ இல்லைடா இன்னைக்கு கெமிஸ்ட்ட்ரி லேப்பில் ஒரே ஒரு பிப்பெட் தான் கொடுத்தாங்க. நான் என் ஆள் நிவேதிதா சொல்யூசன் உறிஞ்சி எடுத்த உடனே நான் உறிஞ்சலாம்னு காத்திட்டு இருந்தேன். எல்லாம் ஒரு “கிக்” குகாகதான் ! ஆனா ஒரு களியன் என்னை முந்திகிட்டு அவள் உறிஞ்சினதுக்கப்புறம் உறிஞ்சிட்டாண்டா !! ”
என்ற மாறனை பார்த்து எனக்கு அழுவதா சிரிப்பதா எனத்தெரியவில்லை ! நீங்களாவது சொல்லுங்களேன் !

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Enna ithukku yaarume comments kudukkala naveen, thabu shankar range la alli thelikireenga........ nalla irukku

Iniyal

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
Enna ithukku yaarume comments kudukkala naveen, thabu shankar range la alli thelikireenga........ nalla irukku

Iniyal //

வாங்க இனியாள் :))

இது நான் க்ளாஸில் ப்ரொபசர் பாடம் நடத்திகிட்டு இருந்தப்போ எழுதினது !! :))) மிக்க நன்றி !!

பெயரில்லா சொன்னது…

naveen unga kavithaikalai mattum illa intha kathai um super..... very nice.......
sharmi

பெயரில்லா சொன்னது…

naveen unga karpan romba azhaku...
romba pidichuruku........
very nice & Super.....

Sharmi

பெயரில்லா சொன்னது…

dai naveen & maran nikal pipetai maranthu pipet company vaika ennu nudaya valthukal.

rafi.

பெயரில்லா சொன்னது…

பாலொடு தேன் கலன்தார் அன்ன பைந்தொடி வா எயிறு ஊறிய நீர் :-)

Ungaloada Narration skills r Really good.