திங்கள், நவம்பர் 28, 2005

இதைத்தான் இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?


இந்த முறை நான் ஜெகனை பார்த்த போது சிறிது இளைத்திருந்தான்.
“ஏண்டா இப்படி இளைச்சிட்ட?” எனக் கேட்ட போது “இல்லைடா. ஜாகிங்க்கும் ஜிம்முக்கும் போறதால அப்படி.”என்று ஜெகன் மந்தகாச புன்னகையுடன் கூறினான்.கூடவே இரண்டு மூன்று pose களில் நின்று தன் ஜிம் பாடியை காட்ட முயற்சித்தான்.
“இங்க பாருடா குண்டா, இதுதான் triceps, இதுதான் biceps எப்படி திரண்டு வருது பார் ” என கைகளை காட்டினான்.எனக்கு எல்லாமே மொத்தமாக தெரிந்தும் ஜெகனின் ஆறுதலுக்காக “ ஆமாண்டா நல்லா பாடியை டெவலப் பண்ணிட்டே “ எனக்கூறியதும் மிகவும் உற்சாகமாக front pose. Back pose வேறு காட்ட ஆரம்பித்துவிட்டான்.என் பாடு திண்டாட்டமாகிவிட்டது. ஒருவழியாக ஜெகனை அமைதிப்படுத்தி அமரவைத்தேன்.

இந்த களேபாரங்களால் தூக்கம் கலைந்த ரியாஸ் “ ஏண்டா மணி 2 தானே ஆகுது.அதுக்குள்ள சத்தம் போட்டு எழுப்பிட்டீங்களே ” என்றபடியே ஒருவாறு எழுந்து சிகரெட் பற்றவைத்துக்கொண்டான்..நானும் ஜெகனும் ஒருவரையொருவர் பார்துக்கொண்டோம்.மணி பிற்பகல் 2 மணி. “அப்புறம் ஜெகன் எப்போ வந்தே? “ என்ற ரியாஸிடம் “ இப்போதான் மாப்ளே ! சிகெரெட் கொஞ்சம் கொடு “ என வாங்கி இரண்டு puf அடித்துவிட்டு தந்தான்.

நான், ஜெகன், ரியாஸ் மூவரும் கல்லூரி நண்பர்கள்.நான் சென்னையில் ஒரு மேன்சனில் தங்கியிருந்தேன்.அங்குதான் ஜெகனும் ரியாசும் விடுமுறைக்கு வந்திருந்தார்கள்.வழக்கமான விசாரணைகளுக்குப் பிறகு பேச்சு ஜெகனைப் பற்றி திரும்பியது.

“ ஏண்டா ஜெகன் ஏன் இத்தனை நாளா ஒரு phone கூட பண்ணலே? “ என்றேன்.

“ இல்லைடா குண்டா டைம் கெடைக்கல அதான் “

“ ஏன் நீ பெங்களூருக்கு STD போட்டு உன் ஆளோட மாத்திரம் பேசத்தெரியுதுல்ல ? எங்களோடையும் தான் பேசறது ?! “

“ போடா டேய் ஏன் புழுகுறே ? நான் அவளை எல்லாம் Cut பண்ணி ரொம்ப நாளாச்சு. அவளோட பேசியே ரெண்டு மாசம் ஆச்சு “ என பெருமிதமாக கூறினான் ஜெகன்.

எனக்கும் ரியஸுக்கும் ஆச்சரியமாகிவிட்டிருந்தது. ஜெகனை நம்பிக்கையில்லாமல் பார்த்தோம். “ ஏண்ட ஜெகன் பொய் சொல்றே ! நீயாவது அவளோட பேசாம இருக்கறதாவது “ என்ற ரியசை புழுவைப்போல் பார்த்து “போங்கடா நம்பாட்டி நான் என்ன பண்றது ? “ என கோபமாக கூறினான்.

நாங்கள் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது அது நிகழ்ந்தது. ஒருநாள் ஜெகன் என்னிடம் வந்து “ டேய் நவின் ஒரு பெண் தோழி வேணுங்கற தாகம் அதிகமாய்ட்டே வருதுடா. எப்படிடா புடிக்கிறது ? “ எனக்கேட்டான்.
“ என்ன ஜெகன் நம்ம காலேஜில இல்லாததா ? நீ எங்கே ?! காலேஜ் வந்தாலே படிச்சிட்ட்டு சீக்கிரம் போக சொல்லிருவாங்கன்னு வர்றதேயில்ல ! “ என்றேன்.
“ அதெல்லாம் இல்லடா நாளைல இருந்து நானும் உன் கூட வர்றேன் !” என உற்சாகமாக கூறினான்.

பின் வந்த நாட்களில் ஜெகன் 9:30 to 10:00 Break time-ல் மாத்திரம் கல்லூரிக்கு வர ஆரம்பித்தான். வழியில் போகும் வரும் பெண்களிடமெல்லாம் அவர்களின் பெயரைக் கேட்க ஆரம்பித்தான். “ டேய் டேய் அவங்க Lecturer டா Complaint போச்சுன்னா காலேஜ்ல பொளந்துடுவானுங்க ! “ என் வார்த்தைகள் குப்பையில் போடப்பட்ட்டது. ஜெகன் போகிற வேகத்தைப்பார்த்தால் தெருவுக்கு ஒரு தோழியை ஏற்படுத்திவிடுவான் போல் தோன்றியது.

இதற்கிடையில் எனக்கு அவசர வேலையாக ஊருக்குச் செல்லவேண்டியிருந்ததால் சென்றுவிட்டேன். நான் ஒரு வாரம் கழித்து திரும்பியபோது ஜெகனின் முகத்தில் வெற்றிப் புன்னகை தவழ்ந்தோடியது.
“ குண்டா நான் புடிச்சுட்டேன் ! “ என ஜெகன் குத்து dance ஆடினான். எனக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. “ ஏய் யார்டா அந்தப் பொண்ணு ? “

“ பொண்ணு Local தான். நம்ம காலேஜ் இல்லே ! PUC படிக்கிறா ! “ என்றான்.
“ டேய் எனக்கு ஒருநாள் introduce பண்ணிவைடா “
“ பார்க்கலாம் “ எனக்கூறிவிட்டு “ அச்சச்சோ ! அவ வர்ற நேரம் ஆச்சு ! “ என பதறி ஓடினான்.

அதன்பின் ஜெகனைப் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டிருந்தது. எங்களிடம் பேசுவதையே மறந்துவிட்டிருந்தான். பார்தாலும் “ ஹலோ “ சொல்லிவிட்டு ஓடினான். தனது class ஐ cut செய்துவிட்டு அவளைக் கொண்டுபோய் PUC college ல் விட்டுவந்தான். ஆமைக்கே சவால் விடும் வகையில் நடக்கும் ஜெகன் “ Ben Jonson “ னாக மாறி ஓடிக்கொண்டிருந்தான். நிறுத்திக்கேட்டால் “ அவ அந்தப்பக்கம் வர்றாடா , நான் அவளுக்கு முன்னாடி போய் அவ எதுத்தாப்புல வரணும் அதான் “ என ஓட்டத்தைத் தொடர்ந்தான். அவள் கல்லூரி செல்லாத நாட்களில் தனது ரூம் phone முன்பு தவமிருக்க ஆரம்பித்தான்.

நிலவில் வாழமுடியுமா ?
முடியாதா ?
என்பதுபற்றியெல்லாம்
எனக்கு கவலையில்லை
நான் நிலவோடு
வாழ்ந்துகொண்டிருப்பவன் ! “
- தபூ சங்கர்.




இவ்வாறாக போய்க்கொண்டிருந்த சூழ்நிலையில் தான் நானும் ஜெகனும் ரியாசும் சென்னையில் சந்தித்தோம்.

“ ஏண்டா ஜெகன் ! உன் நிலவுக்காதல் என்ன ஆச்சு ? அம்பிகாபதி அமராவதிகப்புரம் நீயும் உன் நிலவுந்தான்னு நான் நெனைச்சுகிட்டு இருக்கேன். ஏன்?” என்றேன்.

ஆமாண்டா குண்டா ! நானும் propose பண்ணி ஒரு வருசம் ஆச்சு. அவ அதுக்கு பதில் சொல்லவே மாட்டேங்கறா. அதைப்பத்தி கேட்டாலே Off ஆய்டறா ! போடி சரிதான்னு வந்துட்டேன்.” என்றான்.

“ என்ன ஜெகன் நீ சொல்றதெல்லாம் உண்மையா ? “ என்ற ரியாசிடம் “ ஆமா மாப்ளே .தவிர நம்ம காலேஜ் பொண்ணுங்களை வேற பார்த்தேன். கைல வெண்ணைய வச்சுகிட்டு ஏன் தேவையில்லாம இவ பின்னாடி அலையனும்னு இப்பதான் எனக்கு ஞானோதயம் வந்துச்சு. “ என்றவன் “ இனிமேல் அவளைப்பத்தி பேசாதீங்க ! தெர்தா ! என எச்சரிக்கை எங்களுக்கு விடுக்கப்பட்டது. ‘ சரிதான் பயல் இனிமேல் ஒழுங்கா காலேஜ் போவான் ‘ என சந்தோஷப்பட்டோம்.

இதற்கிடையே செமஸ்டர் பரீட்சை வந்துவிட்டது. எனக்கு சில அரியர்ஸ் இருந்ததால் ( அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜங்க ! ) பெங்களூருக்கு சற்று முன்பே புறப்பட்டு வந்தேன். ரியசும் ஜெகனும் வந்திருந்தனர்( எல்லாரும் ஒரே குட்டைல ஊரின மட்டைகதான் !). பெங்களூரின் climate க்கு எங்களைப் பழக்கப்படுதிக்கொண்டோம்.

“ குண்டா பார்த்தியா இன்னியோட மூனாவது வாரம்! அவளோட பேசவேயில்லையே ! “ என ஒரே attempt ல் எல்லா அரியர்ஸையும் க்ளியர் செய்தது போல் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தான். நானும் ரியாசும் ஜெகனை நினைத்து ஆச்சரியப்பட்டோம்.

அன்று மாலை எங்களுடன் walking வரும்போது ஜெகன் எதோ வெளக்கெண்ணெய் குடித்ததுபோல் உற்சாகமில்லாமல் வந்தான். “ ஏண்டா ஜெகன் நானும் குண்டனும் மட்டும் பேசிக்கொண்டு வர்றோம் நீயும் ஏன் எங்க discussion ல் கலந்துக்க கூடாது?” என்ற ரியாசிடம் “ ஆமா பெரிசா அணுகுண்டு வெடிகிறதைப்பத்தி Discussion ! போங்கடா !” என ஜெகனால் கடிக்கப்பட்டு வாய் மூடிக்கொண்டோம்.

அடுத்த நாள் ஜெகன் அமைதியின்றி காணப்பட்டான். மாடியிலிருந்து கீழும் மேலும் நடைபோட்டான். பல சிகரெட்டுகளை சாம்பலாக்கினான். மாலையில் வந்த ஜெகன் பக்காவான ‘ கெட் அப் ‘ பில் இருந்தான்.

“ கொஞ்சம் wait பண்ணு ஜெகன் கெளம்பிட்டேன் ! போகலாம் !” என்ற என்னை ‘ அற்பனே ! ‘ என்ற பார்வை பார்த்து “ இல்லைடா நான் இனிக்கு walking வர்லே ! நீயும் ரியாசும் மட்டும் போங்க !”
“ ஏண்டா ? “

“ அவ Phone பண்ணியிருந்தா ! என்னை அவ வீட்டுக்கு Invite பண்ணியிருக்கா ! அதான் ! “ என்று சற்றே நாணத்துடன் கூறினான்.
அன்று இரவு திரும்பிவந்த ஜெகனிடம் “ ஏண்டா மெட்ராஸ்ல வந்து அவளைப்பத்தி ‘ ஆ ஊ ‘ ன்னு அறிக்கைவிட்டே ! இப்போ என்ன பண்ணிட்டு இருக்கே ? “ என்ற என்னிடம் “ இல்லைடா குண்டா அவளைப் பார்த்ததுக்கப்புறம் எனக்கு எல்லாமே
மறந்திருச்சுடா ! “ என பரிதாபமாகக் கூறிவிட்டு அவள் நினைவுகளில் ஆழ்ந்தான்.

“ உன் கையசைவிற்காகவே
எத்தனைமுறை வேண்டுமானாலும்
உன்னிடமிருந்து விடை பெறலாம் “
- தபு சங்கர்



8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Nilavukaadhal.... Hee...Hee...Hee. Does Jang and Maran know about this blog?

Divya சொன்னது…

நவீன், உங்கள் நண்பரின் காதல் கதையை அழகாக கூறியிருக்கிறீர்கள்,

நண்பர்களின் உரையாடல்கள், ரசிக்கும்படியாக , யதார்த்தமாக இருந்தது, பாராட்டுக்கள்!!!

[உங்கள் நண்பர் ஜெகனுக்கு வாழ்த்துக்கள்!!!]

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
நவீன், உங்கள் நண்பரின் காதல் கதையை அழகாக கூறியிருக்கிறீர்கள்,

நண்பர்களின் உரையாடல்கள், ரசிக்கும்படியாக , யதார்த்தமாக இருந்தது, பாராட்டுக்கள்!!!

[உங்கள் நண்பர் ஜெகனுக்கு வாழ்த்துக்கள்!!!] //

வாங்க திவ்யா :))
மிக்க நன்றி ரசிப்புக்கம் அளிப்புக்கும் :)))

நாமக்கல் சிபி சொன்னது…

:))

நன்றாகச் சொல்லியிருக்கிறிர்கள்!

கவிதை வலைப்பூவில் கதையா என்று வியந்தேன்!

இதுவும் கவிதைதான்.

//"உன் கையசைவிற்காகவே
எத்தனைமுறை வேண்டுமானாலும்
உன்னிடமிருந்து விடை பெறலாம் “
- தபு சங்கர்
//

அழகான கவிதை. வாழ்க தபு சங்கர்.

கார்த்திக் பிரபு சொன்னது…

idhai ippo than parkirane..copy pann vachrukane padichitu solrane

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
:))

நன்றாகச் சொல்லியிருக்கிறிர்கள்!

கவிதை வலைப்பூவில் கதையா என்று வியந்தேன்!

இதுவும் கவிதைதான்.

//"உன் கையசைவிற்காகவே
எத்தனைமுறை வேண்டுமானாலும்
உன்னிடமிருந்து விடை பெறலாம் “
- தபு சங்கர்
//

அழகான கவிதை. வாழ்க தபு சங்கர்.//

வாருங்கள் சிபி :))
மிக்க நன்றி !! ;)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கார்த்திக் பிரபு said...
idhai ippo than parkirane..copy pann vachrukane padichitu solrane//

வாங்க கார்த்திக் :)) இந்த கதை எப்போவோ எழுதியது ! படித்துப்பார்துவிட்டு சொல்லுங்கள் :)))

பெயரில்லா சொன்னது…

gopi riaz knows about this blog to.rafi.