வெள்ளி, பிப்ரவரி 29, 2008

கொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....


நானெல்லாம் தொலையவே
மாட்டேன் காதலில்
என இறுமாந்திருந்தபோதுதான்
நீ வந்து தொலைத்தாய்



பேசாமலே படுத்துகின்றன

உன் இதழ்கள்
பேசியே கொல்கின்றன
உன் விழிகள்
என்ன செய்ய நான்..?




இவ்வளவு சத்தமாக
யுத்தம் செய்யும்
என நினைக்கவே
இல்லை
உன் மெளனம்..



இதென்ன சின்னபையன் மாதிரி
இப்படி காதலிச்சிக்கிட்டு
என நீ கேட்காதே இனி
அப்புறம் பெரிய பையன்
மாதிரி காதலிக்க
ஆரம்பிப்பேன்
பரவாயில்லையா..?



உன்னை சமாதனப்படுத்தும்
இன்பத்திற்காகவாவது
உன்னுடன் எத்தனை முறை
வேண்டுமானாலும் சண்டை
போடலாமடி செல்லக்குட்டி...


என்மீது கோபம் வரும்போதெல்லாம்
என்னை அறைய வேண்டும் போல்
இருக்கிறதென சொல்கிறாய்
தாராளமாக என்னை அறைந்துகொள்
உன் உதடுகளால் மட்டும்...


கொஞ்சம் நானும்
கொஞ்சம் நீயும்
நம்மை நிறைய
கொஞ்சலாமா..?


ஏன் இப்படி கத்தறே
எனக் கேட்கிறாய்.!
உன்னைக் கொஞ்சும்
இன்பத்திற்காகவே
வித விதமாக உன்னைச்
சீண்டுகிறேன் தெரியுமா..?



இப்படியெல்லாம்
என்னிடம் கேட்டால்
எனக்கு கோபம் வரும்
என செல்கிறாய்
வரட்டுமே !!
அப்பொழுதுதானே
உன்னை சமாதானப்படுத்தும்
சாக்கில்
கன்னா பின்னாவென்று
ஏதேனும் செய்யலாம்..?





நினைக்கவே இல்லை
இவ்வளவு ஆவேசமாக
சண்டை போட்ட நாமா
இப்பொழுதும் அதே
வேகத்தோடு
ஆனால் காதலோடு
செல்லமாக..?


என் கவலைகளை
எல்லாம் உறிஞ்சி
எடுக்கும் மந்திரத்தை
எங்கேயடி கற்றுக்கொண்டன
உன் இதழ்கள்..?


கொஞ்சம் கண்ணாமூச்சி
ஆடலாமா ??
என் உதடுகள் உன்னில் எங்கே
ஒளிந்திருக்கிறதென நீ
கண்ணை மூடிக்கொண்டு
கண்டுபிடிப்பாயாம்...
அப்புறம் நானும்...
சரியாடி ..?



எவ்வளவு உயரம் நீ
எனக்கேட்டால்
சொல்ல மாட்டாயா
இரு இரு என்
உதடுகளை விட்டு
உன்னை அளக்க
வைக்கிறேன்
என செய்வாய் நீ..?


ஒவ்வொரு முறையும்
இனி என்னவோ
சந்திக்கவே போவதில்லை
என்பதைப்போல்தான்
நடந்து கொள்கின்றன
நம் இதழ்கள் ...




சாதாரணமாகவே
நீ கொஞ்சம்
அழகுதான்
இருந்தாலும்
நீ வெட்கப்படும்போது
பேரழகாகதெரிகிறாயாம்
சொல்லி சொல்லி
இறுமாந்து போகின்றன
இந்தக் கண்கள்





என்னவோ
வேண்டாம் என்றுதான்
ஆரம்பிக்கிறது
முடிக்கும் போது
முடிக்கவே வேண்டாம்
என்றுதான் முடிகிறது
இந்த முத்தங்களே
இப்படித்தான்...




சரியான திருடண்டா
நீ என்கிறாய்
என்ன செய்வது
இவ்வளவு அழகான
வெட்கங்களை நீ
வைத்துக்கொண்டிருந்தால்
அதைத் திருடாமல்

என்ன செய்வதாம்..?

எவ்வளவு
நல்ல பையனாக
இருந்தேன் ?
ஏண்டி என்னை
இப்படிச் சீண்டிவிட்டு
உன்னைக் கன்னாபின்னாவென
திருட வைக்கிறாய்..?



இப்படி அழகாக உதடு
சுழித்து என்னைச்
சீண்டிவிட்டு
அப்புறம்
நீ ரொம்ப மோசம் என
என்னைச் சொல்வதில்
அர்த்தம் இல்லை போடி...

ஹைய்யோ விடுடா
இப்போதான் கட்டினேன்
இந்த சேலையை என
நீ சிணுங்குகிறாய்
நானும் உன்னை
இப்போதுதான் கட்டினேன்
எப்படி விடுவது
அவ்வளவு சீக்கிரம்..?



தலைகோதிவிடும்போது
தாயாக
முத்தமிடும்போது
காதலியாக
என்மடியில் தலைவைக்கும்போது
குழந்தையாக
இப்படி பல அவதாரங்களை
எடுக்கிறாயடி நீ...


சீக்கிரம் என்னைக்
கட்டிக்கொள்
நீண்ட நாள் நான் எப்படி
வாழ்வது
என் இதயம் இல்லாமல்....

71 கருத்துகள்:

Divya சொன்னது…

கவிதை சூப்பரு !!

Divya சொன்னது…

\\உன்னை சமாதனப்படுத்தும்
இன்பத்திற்காகவாவது
உன்னுடன் எத்தனை முறை
வேண்டுமானாலும் சண்டை
போடலாமடி செல்லக்குட்டி...\\

சண்டை போட இப்படி வேர ஒரு ரீஸனா?? நல்லாத்தேன் இருக்கு கவிஞரே!

Divya சொன்னது…

\\தலைகோதிவிடும்போது
தாயாக
முத்தமிடும்போது
காதலியாக
என்மடியில் தலைவைக்கும்போது
குழந்தையாக
இப்படி பல அவதாரங்களை
எடுக்கிறாயடி நீ...\

தாயாக......காதலியாக......குழந்தையாக, வாரே வாவ்!
அவதாரங்கள் ரசிக்க வைக்கின்றன!!!

சின்னப் பையன் சொன்னது…

கவிதை சூப்பர்....:-)

Dreamzz சொன்னது…

கவிதை ஒன்றொன்றும் அருமை தோழரே!

//பேசாமலே படுத்துகின்றன
உன் இதழ்கள்
பேசியே கொல்கின்றன
உன் விழிகள்
என்ன செய்ய நான்..?//

இரசித்தேன்!

நிவிஷா..... சொன்னது…

kavidhaigal athanaiyum kalakkal kavingyare

natpodu
nivisha

நித்யன் சொன்னது…

நவீன் பிரகாஷ்...

பிரமாதம்.

குட்டிக்குட்டி முத்தங்களைப் போல சுவாரஸ்யம் அடங்கிக் கிடக்கும் வரிகள்.

மனம் சந்தோஷப்பட வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி...

உங்கள் பணி தொடரட்டும்

Bee'morgan சொன்னது…

ம்.. நல்ல கவிதை.. ஒவ்வொரு வரியிலும், அழகான காதலும், கொஞ்சம் அதிகமாகவே குறும்பும் மிளிர்கிறது.. :-) வாழ்த்துகள்..
அதெல்லாம் சரி, எப்படி இவ்ளொ பொருத்தமா போட்டோ சுட்டீங்க? எல்லாமே செமயா இருக்கு..

ஸ்ரீ சொன்னது…

அதென்னப்பு பெரிய பையன் மாதிரி காதலிக்கறது கொஞ்சம் சொல்றது சின்ன பையன் நானும் தெரிஞ்சுக்குவேன்ல.

கன்னா பின்னாவா? இது குண்டக்க மண்டக்க மாதிரியான ஒரு வார்த்தையா?

என்னத்த சொல்ல? வழக்கம் போல அருமை. காதல் மாசத்தின் கடைசி நாள் கவிதைகள் வந்தாலும் லேட்டஸ்டா வந்துருக்கு ராசா. :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

என்னால முடியல கவிஞரே!! என்றென்றும் புன்னகைளோடு நீங்கள் தொடர்ந்து எழுதிட வேண்டும் :)

இராம்/Raam சொன்னது…

அட்டகாசம்....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
கவிதை சூப்பரு !!//

வாங்க திவ்யா :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\உன்னை சமாதனப்படுத்தும்
இன்பத்திற்காகவாவது
உன்னுடன் எத்தனை முறை
வேண்டுமானாலும் சண்டை
போடலாமடி செல்லக்குட்டி...\\

சண்டை போட இப்படி வேர ஒரு ரீஸனா?? நல்லாத்தேன் இருக்கு கவிஞரே!//

திவ்யா :))
சண்டை போடறதுக்கு இதுதான் காரணம்னு இருக்க முடியுமா என்ன..?
:)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\தலைகோதிவிடும்போது
தாயாக
முத்தமிடும்போது
காதலியாக
என்மடியில் தலைவைக்கும்போது
குழந்தையாக
இப்படி பல அவதாரங்களை
எடுக்கிறாயடி நீ...\

தாயாக......காதலியாக......குழந்தையாக, வாரே வாவ்!
அவதாரங்கள் ரசிக்க வைக்கின்றன!!!//

திவ்யா அதென்னாங்க வாரே வாவ்..?? ;))) ரசிப்புகள் ரசிக்க வைக்கின்றன... நன்றி :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ச்சின்னப் பையன் said...
கவிதை சூப்பர்....:-)//

வாங்க ச்சின்னபையன் :)))
மிக்க நன்றி வருகைக்கும் சூப்பரான தருகைக்கும் :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Dreamzz said...
கவிதை ஒன்றொன்றும் அருமை தோழரே!

//பேசாமலே படுத்துகின்றன
உன் இதழ்கள்
பேசியே கொல்கின்றன
உன் விழிகள்
என்ன செய்ய நான்..?//

இரசித்தேன்!//

வாருங்கள் கனவுக்காரரே :)))))
மிக்க நன்றி கனவான வருகைக்கும் ரசிப்பான தருகைக்கும் ..:))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// நிவிஷா..... said...
kavidhaigal athanaiyum kalakkal kavingyare

natpodu
nivisha//

வாருங்கள் நிவிஷா :))
நல்லா இருகீங்களா..?? கலக்கலான வருகையும் தருகையும் மகிழ்ச்சியளிக்கிறது..... :))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நித்யகுமாரன் said...
நவீன் பிரகாஷ்...

பிரமாதம்.

குட்டிக்குட்டி முத்தங்களைப் போல சுவாரஸ்யம் அடங்கிக் கிடக்கும் வரிகள். //

வாருங்கள் நித்தியகுமாரன் :)))
மிக்க நன்றி... குட்டி குட்டி முத்தங்கள்...அழகான ஒப்புமை :)))

//மனம் சந்தோஷப்பட வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி...

உங்கள் பணி தொடரட்டும்//

மிக்க மகிழ்ச்சியடைந்தேன் மனம் மகிழ நானும் ஒரு காரணம் என அறிந்து.. :))) மிக்க நன்றி !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நித்யகுமாரன் said...
நவீன் பிரகாஷ்...

பிரமாதம்.

குட்டிக்குட்டி முத்தங்களைப் போல சுவாரஸ்யம் அடங்கிக் கிடக்கும் வரிகள். //

வாருங்கள் நித்தியகுமாரன் :)))
மிக்க நன்றி... குட்டி குட்டி முத்தங்கள்...அழகான ஒப்புமை :)))

//மனம் சந்தோஷப்பட வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி...

உங்கள் பணி தொடரட்டும்//

மிக்க மகிழ்ச்சியடைந்தேன் மனம் மகிழ நானும் ஒரு காரணம் என அறிந்து.. :))) மிக்க நன்றி !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Bee'morgan said...
ம்.. நல்ல கவிதை.. ஒவ்வொரு வரியிலும், அழகான காதலும், கொஞ்சம் அதிகமாகவே குறும்பும் மிளிர்கிறது.. :-) வாழ்த்துகள்..
அதெல்லாம் சரி, எப்படி இவ்ளொ பொருத்தமா போட்டோ சுட்டீங்க? எல்லாமே செமயா இருக்கு..//

வாங்க Beeமார்கன் :))
அதிகமாக குறும்பா என்ன.?? இருக்காதே..;)))))) மிக்க நன்றி... போட்டோ எல்லாம் ஏற்கனவே யாரோ சுட்டது (shoot) தாங்க நான் சும்மா எடுத்துபோட்டு இருக்கேன்..:)))))))

மங்களூர் சிவா சொன்னது…

ம்

ஒண்ணும் சொல்றதுக்கில்லை!!

மாப்பி சீக்கிரம் கலியாணம் பண்ணிக்கய்யா!!!

கவிதைகள் 'கொல்'லுது.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ஸ்ரீ said...
அதென்னப்பு பெரிய பையன் மாதிரி காதலிக்கறது கொஞ்சம் சொல்றது சின்ன பையன் நானும் தெரிஞ்சுக்குவேன்ல.

வாங்க ஸ்ரீ :)))

ஆஹா உங்களுக்கே சொல்லிதரனுமா..?? பெரியபையனான உங்களுக்கே சொல்லிதரணுமா என்ன..?? ;)))))

//கன்னா பின்னாவா? இது குண்டக்க மண்டக்க மாதிரியான ஒரு வார்த்தையா? //

ஹஹ்ஹஹ் அது ச்சும்மா.... ;)))

//என்னத்த சொல்ல? வழக்கம் போல அருமை. காதல் மாசத்தின் கடைசி நாள் கவிதைகள் வந்தாலும் லேட்டஸ்டா வந்துருக்கு ராசா. :))//

எல்லாம் உங்க ஆசீர்வாதம் ஸ்ரீ :))) மிக்க நன்றி !!!

Unknown சொன்னது…

///கொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....//

superu pa...

Praveena சொன்னது…

என் வலைதளம் வந்தமைக்கு நன்றி நவீன் ப்ரகாஷ்.

உங்கள் கவிதைகளில் காதல் நவரசம் வழிந்தோடுகின்றது,
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அருமை, மிகவும் ரசித்தேன்.

உங்கள் கவிதை தொகுப்புகள் அனைத்தையும் படித்திட ஆசை, நேரம் கிடைக்கையில் நிச்சயம் என் கருத்துக்களை பதிக்கிறேன்!

தொடரட்டும் உங்கள் காதல் ' கன்னா பின்னா'வென்று!!

ரசிகன் சொன்னது…

//என்மீது கோபம் வரும்போதெல்லாம்
என்னை அறைய வேண்டும் போல்
இருக்கிறதென சொல்கிறாய்
தாராளமாக என்னை அறைந்துகொள்
உன் உதடுகளால் மட்டும்...//

கலக்கல்.. எப்டிங்க நவின்,இதெல்லாம்:) .. சூப்பர்..

ரசிகன் சொன்னது…

எப்பவும் போல உருக்கிட்டிங்க... தொடருங்க..

கப்பி | Kappi சொன்னது…

செம கலக்கல் அண்ணாத்த :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//sathish said...
என்னால முடியல கவிஞரே!! என்றென்றும் புன்னகைளோடு நீங்கள் தொடர்ந்து எழுதிட வேண்டும் :)//

வாங்க சதீஷ் :))

அட என்ன முடியல..?? :))) உங்கள் ஆசீர்வாதத்திற்கு மிக்க நன்றி !!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இராம்/Raam said...
அட்டகாசம்....//

வாருங்கள் ராம் :)))
தொடர்ந்த வருகைக்கு மிக்க நன்றி !! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மங்களூர் சிவா said...
ம்

ஒண்ணும் சொல்றதுக்கில்லை!!

மாப்பி சீக்கிரம் கலியாணம் பண்ணிக்கய்யா!!!

கவிதைகள் 'கொல்'லுது.//

வாங்க சிவா :)))
ஹஹஹ என்னாங்க இது கல்யாணம் பண்ணிக்க சொல்லறீங்க..?? :))))

கவிதைகள் கொல்லுதா..?? :))) ரசிப்பான விமர்சனம்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நெல்லை காந்த் said...
///கொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....//

superu pa...//

வாங்க நெல்லை காந்த்:))
மிக்க நன்றிங்க... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Praveena Jennifer Jacob said...
என் வலைதளம் வந்தமைக்கு நன்றி நவீன் ப்ரகாஷ்.//

வாங்க ப்ரவீணா :)))
அட இதற்கெல்லாம் நன்றியா..? :))

//உங்கள் கவிதைகளில் காதல் நவரசம் வழிந்தோடுகின்றது,
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அருமை, மிகவும் ரசித்தேன்.//

அப்படியா..? :))) நவரசமா..? :)))
மேலும் ரசியுங்கள் ப்ரவீணா..

//உங்கள் கவிதை தொகுப்புகள் அனைத்தையும் படித்திட ஆசை, நேரம் கிடைக்கையில் நிச்சயம் என் கருத்துக்களை பதிக்கிறேன்!//

நேரத்தை கொஞ்சம் திருடி வந்து வேண்டுமானால் படியுங்களேன் :))))

//தொடரட்டும் உங்கள் காதல் ' கன்னா பின்னா'வென்று!!//

:)))) கன்னாபின்னாவெனவா..?
மிக்க நன்றி வருகைக்கும்..
அழகான தருகைக்கும்....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ரசிகன் said...
//என்மீது கோபம் வரும்போதெல்லாம்
என்னை அறைய வேண்டும் போல்
இருக்கிறதென சொல்கிறாய்
தாராளமாக என்னை அறைந்துகொள்
உன் உதடுகளால் மட்டும்...//

கலக்கல்.. எப்டிங்க நவின்,இதெல்லாம்:) .. சூப்பர்..//

வாங்க ரசிகன்..:))))
கலக்கலான பின்னூட்டம் :))) எல்லாம் உங்கள் ஊக்கம் தான் ரசிகன் !!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ரசிகன் said...
எப்பவும் போல உருக்கிட்டிங்க... தொடருங்க..//

:))) உருக்கிட்டேனா..?? அப்படியா என்ன..?? நன்றி! நன்றி !

Praveena சொன்னது…

\\ நவீன் ப்ரகாஷ் said...

//உங்கள் கவிதை தொகுப்புகள் அனைத்தையும் படித்திட ஆசை, நேரம் கிடைக்கையில் நிச்சயம் என் கருத்துக்களை பதிக்கிறேன்!//

நேரத்தை கொஞ்சம் திருடி வந்து வேண்டுமானால் படியுங்களேன் :))))\\

உங்கள் குறும்பு காதல் வரிகளை படிக்க, 'கொஞ்சம்' நேரம் திருடினால் போதாது போலிருக்கிறது.....என்ன செய்ய???

பெயரில்லா சொன்னது…

அடேயப்பா எவ்வளவு அருமை...வாழ்த்துகள்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Praveena Jennifer Jacob said...
\\ நவீன் ப்ரகாஷ் said...

//உங்கள் கவிதை தொகுப்புகள் அனைத்தையும் படித்திட ஆசை, நேரம் கிடைக்கையில் நிச்சயம் என் கருத்துக்களை பதிக்கிறேன்!//

நேரத்தை கொஞ்சம் திருடி வந்து வேண்டுமானால் படியுங்களேன் :))))\\

உங்கள் குறும்பு காதல் வரிகளை படிக்க, 'கொஞ்சம்' நேரம் திருடினால் போதாது போலிருக்கிறது.....என்ன செய்ய??? //

வாங்க ப்ரவீணா :))
கவிதைகளைப் படிக்க கொஞ்சம் நேரம் திருடினால் போதாதா..? கொஞ்ச நேரம் என பேச்சுக்குத்தானே சொன்னேன்..? திருட்டுதானே..?? கொஞ்சமாய் என்ன கஞ்சத்தனம்...? :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இனியவள் புனிதா said...
அடேயப்பா எவ்வளவு அருமை...வாழ்த்துகள்//

வாருங்கள் புனிதா.. :))
நீண்ட நாட்களுக்குப் பின் வருகை உவகை அளிக்கிறது..... மிக்க நன்றி !!! :))))

ச.பிரேம்குமார் சொன்னது…

அழகான கவிதைகள் நவீன்

//கொஞ்சம் நானும்
கொஞ்சம் நீயும்
நம்மை நிறைய
கொஞ்சலாமா..?
//

அருமை :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// பிரேம்குமார் said...
அழகான கவிதைகள் நவீன்

//கொஞ்சம் நானும்
கொஞ்சம் நீயும்
நம்மை நிறைய
கொஞ்சலாமா..?
//

அருமை :)//

வாங்க பிரேம் :)))
மிக்க நன்றி அருமையாக வருகைக்கும் நிறைவான தருகைக்கும் :)))

கதிர் சொன்னது…

உங்கள் காதல் குறும்புகள் மிகவும் ரசிக்கும்படி இருந்தன.
கதிர்.

Divya சொன்னது…

\\பேசாமலே படுத்துகின்றன
உன் இதழ்கள்
பேசியே கொல்கின்றன
உன் விழிகள்
என்ன செய்ய நான்..?\\

அழகான கேள்வியுடன்....அழகான காதல் வரிகள்!!

Divya சொன்னது…

\\இவ்வளவு சத்தமாக
யுத்தம் செய்யும்
என நினைக்கவே
இல்லை
உன் மெளனம்..\

காதலில் அஹிம்சை போராட்டமும் அழகுதான் போலிருக்கிறது !!!

Divya சொன்னது…

\\கொஞ்சம் நானும்
கொஞ்சம் நீயும்
நம்மை நிறைய
கொஞ்சலாமா..?\

நச்சென்ற வரிகள்!!

Divya சொன்னது…

\\\சரியான திருடண்டா
நீ என்கிறாய்
என்ன செய்வது
இவ்வளவு அழகான
வெட்கங்களை நீ
வைத்துக்கொண்டிருந்தால்
அதைத் திருடாமல்
என்ன செய்வதாம்..?\\

இது வித்தியாசமான திருட்டாக தெரிகிறதே...!!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கதிர் said...
உங்கள் காதல் குறும்புகள் மிகவும் ரசிக்கும்படி இருந்தன.
கதிர்.//

வாருங்கள் கதிர் :))
முதன்முறை வருகிறீர்களா..? மிக்க நன்றி வருகைக்கும் ரசிப்பான தருகைக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\பேசாமலே படுத்துகின்றன
உன் இதழ்கள்
பேசியே கொல்கின்றன
உன் விழிகள்
என்ன செய்ய நான்..?\\

அழகான கேள்வியுடன்....அழகான காதல் வரிகள்!!//

வாங்க திவ்யா..:))))
அப்படியா..?? நீங்கள் சொன்னால் சரிதான் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\இவ்வளவு சத்தமாக
யுத்தம் செய்யும்
என நினைக்கவே
இல்லை
உன் மெளனம்..\

காதலில் அஹிம்சை போராட்டமும் அழகுதான் போலிருக்கிறது !!!//

வாங்க திவ்யா...
அஹிம்சையான போராட்டம் ஹிம்சையான போராட்டமும் கூட.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\கொஞ்சம் நானும்
கொஞ்சம் நீயும்
நம்மை நிறைய
கொஞ்சலாமா..?\

நச்சென்ற வரிகள்!!//

திவ்யா...
'நச்' சென்றிருக்கிறதா..?? நன்றி!! நன்றி !!!

Divya சொன்னது…

\\ நவீன் ப்ரகாஷ் said...
// Divya said...
\\இவ்வளவு சத்தமாக
யுத்தம் செய்யும்
என நினைக்கவே
இல்லை
உன் மெளனம்..\

காதலில் அஹிம்சை போராட்டமும் அழகுதான் போலிருக்கிறது !!!//

வாங்க திவ்யா...
அஹிம்சையான போராட்டம் ஹிம்சையான போராட்டமும் கூட.. :)))\\

'ஹிம்சை'யான போராட்டத்துக்குதானே சார் காதலர்கள் 'ஆசை' படுறாங்க.

Divya சொன்னது…

\\நானெல்லாம் தொலையவே
மாட்டேன் காதலில்
என இறுமாந்திருந்தபோதுதான்
நீ வந்து தொலைத்தாய்\\

ஒவரு 'நினைப்ஸ்'தான்
'பொழைப்'சை கெடுக்கும்னு சொல்றது இதுதானோ???

[ரவுண்டா 50 கமெண்ட்ஸ்.....போட்டாச்சுங்க கவிஞரே,
50 ஆவது கமெண்ட் போட்டதுக்கு 'கொத்து பரோட்டா' பார்சல் ப்ளீஸ்]

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\ நவீன் ப்ரகாஷ் said...
// Divya said...
\\இவ்வளவு சத்தமாக
யுத்தம் செய்யும்
என நினைக்கவே
இல்லை
உன் மெளனம்..\

காதலில் அஹிம்சை போராட்டமும் அழகுதான் போலிருக்கிறது !!!//

வாங்க திவ்யா...
அஹிம்சையான போராட்டம் ஹிம்சையான போராட்டமும் கூட.. :)))\\

'ஹிம்சை'யான போராட்டத்துக்குதானே சார் காதலர்கள் 'ஆசை' படுறாங்க.//

வாங்க திவ்யா..:)))
அப்படியா என்ன..? எனக்குத்தெரியாதே..?? ;))))))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\நானெல்லாம் தொலையவே
மாட்டேன் காதலில்
என இறுமாந்திருந்தபோதுதான்
நீ வந்து தொலைத்தாய்\\

ஒவரு 'நினைப்ஸ்'தான்
'பொழைப்'சை கெடுக்கும்னு சொல்றது இதுதானோ??? //

திவ்யா :))
அது என்ன ஓவர் நெனப்ஸ்..? ஹஹ்ஹஹ அப்படியெல்லாம் இல்லை... இது இருவருக்கும் பிடித்த ஒரு செல்லமான சலிப்பு.. ;)))))

//[ரவுண்டா 50 கமெண்ட்ஸ்.....போட்டாச்சுங்க கவிஞரே,
50 ஆவது கமெண்ட் போட்டதுக்கு 'கொத்து பரோட்டா' பார்சல் ப்ளீஸ்]//

அதென்னா கொத்து பரோட்டா..?? பார்சல் எல்லாம் வாங்கினா நல்லா இருக்காது .. சுட சுட சாப்டாதான் நல்லா இருக்கும் அதனால..... :)))))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ஒரு செல்லமான சலிப்பு.. ;))))) //

என்னால மீண்டும் முடியல கவிஞரே!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//sathish said...
//ஒரு செல்லமான சலிப்பு.. ;))))) //

என்னால மீண்டும் முடியல கவிஞரே!!//

வாங்க சதீஷ் :))
அடடா.. என்ன இது ..?? :))))) முடியும்னு நெனைங்களேன் :))))

Unknown சொன்னது…

நவீன் காதல் மாசத்தின் கடைசி நாள் அன்னிக்கு வந்து கலக்கிட்டீங்க போலிருக்கு... நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் உங்கள் அட்டகாசமான கவிதைகள்... :)

நாடோடி இலக்கியன் சொன்னது…

கொஞ்ச(சு)ம் காதல் நிறைய குறும்பு!!!
இந்த மாதிரி படங்களை பார்த்தாலே கவிதை எழுதத் தோணுது.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தேவ் | Dev said...
நவீன் காதல் மாசத்தின் கடைசி நாள் அன்னிக்கு வந்து கலக்கிட்டீங்க போலிருக்கு... நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் உங்கள் அட்டகாசமான கவிதைகள்... :)//

வாங்க தேவ் :)))))
ஆஹா கலக்கீட்டேனா..? :))) தேவ் கிட்டே இருந்து இப்படி ஒரு பாராட்டு எனக்கு பெருமை :))))
மிக்க நன்றி தேவ் அருமையான வருகைக்கும் நிறைவான தருகைக்கும் :)))))

Naresh Kumar சொன்னது…

சும்மா சொல்ல கூடாது நவீன்,

'இச்'ஐப் பற்றிய வரிகள் 'நச்'னு இருக்கு

FunScribbler சொன்னது…

நண்பா, கவிதை கலக்கல்ஸ்!! சரி சரி எப்போ கல்யாணம்!! அண்ணி வந்தபிறகு அவங்ககிட்ட சொல்லிட வேண்டியது தான்!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நாடோடி இலக்கியன் said...
கொஞ்ச(சு)ம் காதல் நிறைய குறும்பு!!!
இந்த மாதிரி படங்களை பார்த்தாலே கவிதை எழுதத் தோணுது.//

வாங்க இலக்கியன் :)))
நிறைய குறும்புகள் இருக்கா...?? :))) கவிதை எழுதியபின் தானே படம் எடுத்தேன் :))) மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும்....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Naresh Kumar said...
சும்மா சொல்ல கூடாது நவீன்,

'இச்'ஐப் பற்றிய வரிகள் 'நச்'னு இருக்கு//

வாங்க நரேஷ் குமார் :))))
இச் பற்றிய கவிதைகள் நச் சுன்னு இருக்கா... :))))) நச்சென்ற விமர்சனம் மிக ரசித்தேன்.... நன்றி !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Thamizhmaagani said...
நண்பா, கவிதை கலக்கல்ஸ்!! சரி சரி எப்போ கல்யாணம்!! அண்ணி வந்தபிறகு அவங்ககிட்ட சொல்லிட வேண்டியது தான்!!//

வாங்க தமிழ்மாங்கனி :))))
நீண்ட நாட்களுக்குப்பின் உங்க விமர்சனம் கலக்கல்ஸ் தான் எனக்கு... :)))) அதென்னாங்க கவிதைல கல்யாணம்னு சொலி இருகேனா என்ன ..?? அண்ணிய நெனச்சு தானே கவிதை!!!!அப்புறம் என்ன..?? :)))))

எழில்பாரதி சொன்னது…

கவிதைகள் சூப்பர் நவின்!!!

தமதமான வருகைக்கு மன்னிக்கவும்!!!

எழில்பாரதி சொன்னது…

//தலைகோதிவிடும்போது
தாயாக
முத்தமிடும்போது
காதலியாக
என்மடியில் தலைவைக்கும்போது
குழந்தையாக
இப்படி பல அவதாரங்களை
எடுக்கிறாயடி நீ...//

அருமையான வரிகள் மிகவும் ரசித்தேன்!!!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//எழில்பாரதி said...
கவிதைகள் சூப்பர் நவின்!!!

தமதமான வருகைக்கு மன்னிக்கவும்!!!

//தலைகோதிவிடும்போது
தாயாக
முத்தமிடும்போது
காதலியாக
என்மடியில் தலைவைக்கும்போது
குழந்தையாக
இப்படி பல அவதாரங்களை
எடுக்கிறாயடி நீ...//

அருமையான வரிகள் மிகவும் ரசித்தேன்!!!! //

வாங்க எழில் :))
மிகவும் ரசித்தீர்களா..?? மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் ..:))

Shwetha Robert சொன்னது…

Beautiful poem with apt pictures,hats off:-)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Shwetha Robert said...

Beautiful poem with apt pictures,hats off:-) //

வாங்க ஸ்வேதா..:)))

மிக்க நன்றி... வருகைக்கும்
அழகான ரசனைக்கும்... :))))

jude4u சொன்னது…

kavithai nala eruku

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//jude said...

kavithai nala eruku //

வாருஙகள் jude

வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி.. :))

பெயரில்லா சொன்னது…

Who is the girl made u writting this poem beautifully...? She is a lucky girl...