
திருட்டு பய ! சொரிப்பய சுத்த அல்பம்! மடயன் ! என் ரூம்மேட் மாறன் யாரையோ திட்டிக்கொண்டே ரூமுக்குள் வந்தான்.
“ ஏண்டா மாறா ? “ என நான் கேட்ட கேள்வியை கேட்ட மாதிரி தெரியவில்லை.
“ பண்ணாரிப்பய ! ஏன் தான் இப்படி இருகிறானுங்களோ? கழியன்களே இப்படி தாண்டா ! “
எனக்கோ ஆர்வம் அதிகமாகியது.மாறன் தொடர்ந்தான்.
“ நான் ஒருத்தன் நின்னுகிட்டு இருக்கேன்.அதுக்குள்ள முந்திகிட்டாங்கட! ஏமாந்தா தலையில உக்கார்து மொளகா அரச்சுடுவானுங்கடா ! “
எனக்கோ எரிச்சலாக இருந்தது.விசயத்தை கூறாமல் அவன் பாட்டுக்கு உளறிக்கொண்டிருந்தான்.
“ அதனை பேர் பார்கிறாங்களேன்னு ஒரு வெவஸ்தை இல்ல? அந்த பரதேசி பயலுக்கு? தத்திப்பய .ஒரு செகெண்ட் கவனிக்காம இருந்துட்டேன்.அந்த பய முந்திகிட்டான்.எனக்கு அப்படியே உடம்பெல்லாம் ஆசிட் கொட்னமாதிரி ஆயிடுச்சுடா ! என்ன பண்றது ? அப்படியே பல்லை கடிசிட்டு இருந்துட்டேன்.”
மாறன் பல் கடிக்கும் சத்தம் Dடிஎச் எபட்டில் என்னக்கு கேட்டது. என் பொருமை எல்லை கடந்தது.
“ மாறா ஒழுங்கா என்ன நடந்ததுன்னு சொல்லிட்டு பொலம்பு “ என்றேன் கோபமாக.
“ இல்லைடா இன்னைக்கு கெமிஸ்ட்ட்ரி லேப்பில் ஒரே ஒரு பிப்பெட் தான் கொடுத்தாங்க. நான் என் ஆள் நிவேதிதா சொல்யூசன் உறிஞ்சி எடுத்த உடனே நான் உறிஞ்சலாம்னு காத்திட்டு இருந்தேன். எல்லாம் ஒரு “கிக்” குகாகதான் ! ஆனா ஒரு களியன் என்னை முந்திகிட்டு அவள் உறிஞ்சினதுக்கப்புறம் உறிஞ்சிட்டாண்டா !! ”
என்ற மாறனை பார்த்து எனக்கு அழுவதா சிரிப்பதா எனத்தெரியவில்லை ! நீங்களாவது சொல்லுங்களேன் !