
ஏண்டா இப்படிக் காதலிச்சு என்
உயிரை வாங்கற..?
என அழகாக நீ
அலுத்துக்கொள்ளும்போது
என் உயிரை வாங்குவது
என்னவோ நீதான்...
உயிரை வாங்கற..?
என அழகாக நீ
அலுத்துக்கொள்ளும்போது
என் உயிரை வாங்குவது
என்னவோ நீதான்...

எப்படி என்னை
உன்னுடன் கூட்டிபோவது
எனக்கேட்கிறாய்
நான் வேண்டுமானால்
உன் துப்பட்டாவுக்குள்
ஒளிந்துகொள்ளட்டுமா?
உன்னுடன் கூட்டிபோவது
எனக்கேட்கிறாய்
நான் வேண்டுமானால்
உன் துப்பட்டாவுக்குள்
ஒளிந்துகொள்ளட்டுமா?

தாவணி கட்டினால்
இடுப்பு தெரியும்
கட்டமாட்டேன் என
ஏன் அடம் பிடிக்கிறாய்?
சரி விடு அப்போ
என்னையாவது
கட்டிக்கொள்
உன் இடுப்பை மறைத்துத்
தொலைக்கிறேன்
இடுப்பு தெரியும்
கட்டமாட்டேன் என
ஏன் அடம் பிடிக்கிறாய்?
சரி விடு அப்போ
என்னையாவது
கட்டிக்கொள்
உன் இடுப்பை மறைத்துத்
தொலைக்கிறேன்

நீ எனக்குச் சேலை கட்டக்
கற்றுக்கொடுப்பதற்குள்
போதும் போதும்
என்றாகிவிடுகிறது போடா..
கட்ட ஆரம்பிப்பதற்குள்
என்னைக் கட்டிக்
கொல்கிறாய்...
கற்றுக்கொடுப்பதற்குள்
போதும் போதும்
என்றாகிவிடுகிறது போடா..
கட்ட ஆரம்பிப்பதற்குள்
என்னைக் கட்டிக்
கொல்கிறாய்...

எனக்கு கல்யாணம்
கட்டிக்கவே பிடிக்கலை
எனச் சொல்லிவிட்டு
சென்றால் எப்படி??
அப்படியென்றால்
என்னையாவது
கட்டிக்கொள்ளேண்டி ??
கட்டிக்கவே பிடிக்கலை
எனச் சொல்லிவிட்டு
சென்றால் எப்படி??
அப்படியென்றால்
என்னையாவது
கட்டிக்கொள்ளேண்டி ??

எப்போதெல்லாம் என்
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறாய்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறாய்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?

உனக்கு கொடுக்க
நினைத்த முத்தங்களை
சேமித்து வைத்திருக்கிறேன்
சீக்கிரம் வாங்கிக்கொள்
வட்டி ஏறிக்கொண்டே
போகிறது !!!
நினைத்த முத்தங்களை
சேமித்து வைத்திருக்கிறேன்
சீக்கிரம் வாங்கிக்கொள்
வட்டி ஏறிக்கொண்டே
போகிறது !!!

அட இவ்வளவு மென்மையான
மனசா உனக்கு என நிஜமாகவே
நான் கேட்டால் ஏண்டி
உடனே என்னை முறைத்துவிட்டு
மறைத்துக்கொள்கிறாய்???
நான் நெஜம்மா மனசைத்தான் கேட்டேன்
தெரியுமா ?
மனசா உனக்கு என நிஜமாகவே
நான் கேட்டால் ஏண்டி
உடனே என்னை முறைத்துவிட்டு
மறைத்துக்கொள்கிறாய்???
நான் நெஜம்மா மனசைத்தான் கேட்டேன்
தெரியுமா ?

உன்னையெல்லாம்
எப்படி காதலித்துத்
தொலைத்தேன் ??
பாழாய்ப்போன மனம்
உன் பின்னே
ஒரு நாய்க்குட்டியைப் போல்
ஓடி என் உயிரை எடுக்கிறது...
எப்படி காதலித்துத்
தொலைத்தேன் ??
பாழாய்ப்போன மனம்
உன் பின்னே
ஒரு நாய்க்குட்டியைப் போல்
ஓடி என் உயிரை எடுக்கிறது...

நீ அழகானவள் தான்
ஆனால் உன்னைவிட
உன் அன்பு மிக அழகாக
இருக்கிறது
ஆனால் உன்னைவிட
உன் அன்பு மிக அழகாக
இருக்கிறது