
நான் கலராகி விட்டேனா
எனக் கேட்கிறாய்
நீ எந்தக் கலராக
இருந்தாலும்
எனக்குப் பிடித்த
கலர் நீதானே..?
எனக் கேட்கிறாய்
நீ எந்தக் கலராக
இருந்தாலும்
எனக்குப் பிடித்த
கலர் நீதானே..?

ஏன் நான் நிறம்
குறைவாகப் பிறந்தேன்
ஏனடி அடிக்கடி
சலித்துக்கொள்கிறாய் ?
உன் நிறையே
உன் நிறம் தான்...
உணர்வாயா..?
குறைவாகப் பிறந்தேன்
ஏனடி அடிக்கடி
சலித்துக்கொள்கிறாய் ?
உன் நிறையே
உன் நிறம் தான்...
உணர்வாயா..?

சிகப்பாக
இல்லையே என
கவலைப் படாதேடி
எந்தச் சிகப்பழகும்
கொடுக்காத அழகை
உன் சிரிப்பழகு
கொடுக்கிறது
தெரியுமாடி..?
இல்லையே என
கவலைப் படாதேடி
எந்தச் சிகப்பழகும்
கொடுக்காத அழகை
உன் சிரிப்பழகு
கொடுக்கிறது
தெரியுமாடி..?

என் நிறமே எனக்குப்
பிடிக்கவில்லை
என அடிக்கடி
அழகாகக் குறைபட்டுக்
கொள்கிறாய்
எனக்குப் பிடித்ததே
உன் நிறம் தான்
என உணராமல்...
பிடிக்கவில்லை
என அடிக்கடி
அழகாகக் குறைபட்டுக்
கொள்கிறாய்
எனக்குப் பிடித்ததே
உன் நிறம் தான்
என உணராமல்...