
நீ ஆரம்பித்தால்
என்ன
நான் ஆரம்பித்தால்
என்ன
சண்டையின் முடிவை
எங்கிருந்துஆரம்பிக்கட்டும்..?
கொஞ்சல்களிலா..
இல்லை மிஞ்சல்களிலா..

நீ
கோபமாயிருக்கையில்
உன்னைக் கொஞ்சும் போது
அதை ரசிக்காத மாதிரி
நீ நடித்துக்கொண்டிருக்கும் போது
இன்னும் கொஞ்சம் அழகாக
இருக்கடி செல்லம்...

என்னதான் சொல்லு...
உன்னிடம் சண்டையிடும்
சுகமே தனிதான்....
'காச்' 'மூச்' சென்று
சண்டையிடும் உன்
அழகான குரலுக்காகவேணும்
உன்னிடம் குட்டி குட்டியாய்
சண்டையிட வேண்டும் நான்....

என்னை எப்படியெல்லாம்
திட்டினாய்
இனி ஜென்மத்துக்கும்
உன்னிடம் பேச மாட்டேன்
என கோபமாகச் சொன்னால் எப்படி..?
சரி உன் இஷ்டம் ...
அப்போ நான் என்ன செய்தாலும்
சிணுங்கக் கூட கூடாது
சரியாடி..?

நினைத்து நினைத்து
ஒவ்வொன்றாகச்சொல்லி
சலிக்காமல்
எப்படி உன்னால் மட்டும்
சண்டையிட முடிகிறது....?
இவ்வளவு நினைவுகளையும்
சுமந்து நிற்கும்
உன் மனதுக்கு
பலமுத்தங்களைப்
பரிசாகத் தருகிறேன்
என்றாலும் முறைக்கிறாய்
என்னடி செய்ய நான்..?

உன்னிடம் நான்
எதற்கெடுத்தாலும்
சண்டையிடுவதாய்
என்னிடம் கோபமாகச்
சொல்கிறாய்
எதையோ அல்ல...
உன்னை எடுக்கத்தான்..
என உன் மரமண்டைக்கு
தெரியவில்லையாடி...??

சும்மா இருந்தால்
மறந்து விடுவேன் என
நினைத்துதானே
என்னிடம் சண்டை போட்டு
ஒவ்வொருநொடியும்
உன்னைநினைக்க வைக்கிறாய்...?
சரியான நினைவு திருடிடி நீ...

போதும் இனி
என்னுடன்பேசாதே
எனக் கோபமாகச்சொல்கிறாய்...
சரி என் வாயை மட்டும்
இனி உன்னிடம்பேசாமல்
இருக்கச்சொல்கிறேன்
போதுமா...?

வார்த்தைகளால்
உன்னைக்காயப்படுத்துகிறேன்
என ஏண்டி அபாண்டமாக
பழிசொல்கிறாய்...??
நீ காயப்பட்டால்
வலிக்கப் போவது
எனக்குத்தான்
எனத் தெரியாதா உனக்கு..?

எவ்வளவுதான் மறைத்தாலும்
மறைக்கமுடியாத
உன் அழகுபோல
என்னதான்கோபமாக
இருந்தாலும்
அவ்வப்போது
என்னைப்பார்க்கும்
உன் கண்களின்
காதலை மறைக்கப்
படும்பாடு ரொம்ப
அழகாக இருக்குடி
செல்லக்குட்டி..