புதன், மார்ச் 01, 2006

மலராத பொழுது



சில மாதங்கள்
நினைவுபடுத்துகின்றன
குளிர்தழுவும்
மார்கழியைப் போல்
என்னைத்தழுவி நிற்கும்
உன் நினைவுகள்

கோலத்தில் இட்ட
பூசணிப் பூப்போல
அதிகாலையிலேயே
நீயும்
கோலங்களுக்கிடையே
மற்றுமொரு
கோலமாக
பூத்து நிற்கிறாய்

பூக்களுக்கெல்லாம்
வேர்த்திருக்கின்றது
படிந்திருக்கும்
அதிகாலைப் பனி
கோலமிட்டுக்
களைத்திருக்கும் உன்
நெற்றியைப் போல

மெதுவாக விலகுகிறது
நீ வந்துவிட்டதைக்
கண்ட இருள்
ஆதவனைக் கண்டால்
வேறு என்ன செய்யும் ?
இருந்தும் உன்னைத்
தழுவிக்கிடக்கிறது
இருள்
பிறிய மனமில்லாமல்
கிடக்கும்
ஒரு காதலனைப் போல

இன்றும் மார்கழி
வருகிறது
கோலங்களுக்கிடையே
பூமலர்கிறது
பூக்களுக்கிடையே
தேடுகிறேன்
இருந்தும் என்ன
நீ மலர்ந்திராத கோலங்கள்
என்முன்
பனியில்லாத
மார்கழியாய்...

6 கருத்துகள்:

சிங். செயகுமார். சொன்னது…

மலரும் நினைவுகள்
மனசுக்குள் மத்தாப்பாய்
தினம் ஒரு காதலாய்
வாழ்த்த தெரியவில்லை நண்பரே!

பெயரில்லா சொன்னது…

நீ மலர்ந்திராத கோலங்கள்
என்முன்
பனியில்லாத
மார்கழியாய்...

அழகான உண்மையான வரிகள் !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

வருக குமார்,

நன்றி ! மற்றுமொரு காதலுக்கு !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

வருக கணேஷ்,
நன்றி! வருகைக்கும் தருகைக்கும்!

கீதா சொன்னது…

//மெதுவாக விலகுகிறது
நீ வந்துவிட்டதைக்
கண்ட இருள்
ஆதவனைக் கண்டால்
வேறு என்ன செய்யும் ?
இருந்தும் உன்னைத்
தழுவிக்கிடக்கிறது
இருள்
பிறிய மனமில்லாமல்
கிடக்கும்
ஒரு காதலனைப் போல//

அபாரம். அழகான கற்பனை.. வருணனை..

விடிந்தும் விடியாத காலைப்ப்பொழுதின் கவின் காட்சி கண்முன்னே தெரிகிறது.

அன்புடன்
கீதா

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

நன்றி கீதா,

இனிது இனிது
கற்பனைகள்
இனிது
அதனினும் இனிது
அதனை
ரசிக்கும் வரிகள்